கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்க இருந்த வாடிவாசல் படம் தொடங்க இருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பே பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதோடு இந்த படத்தின் வி.எப்.எக்ஸ் வேலைகள் வெளிநாட்டில் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் திடீரென அப்படத்தின் வேலைகள் கைவிடப்பட்டு வெற்றிமாறனும், சூர்யாவும் வெவ்வேறு படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்கள்.
ஒரு கட்டத்தில் வாடிவாசல் படத்தில் தனுஷ் நடிக்க போவதாகவும் செய்திகள் வந்தன. என்றாலும் அது குறித்து படத்தை தயாரிக்கும் எஸ். தாணுவிடமிருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இப்படியான நிலையில், சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்து கொண்டார் வெற்றிமாறன். அந்த விழாவுக்கு தயாரிப்பாளர் எஸ்.தாணுவும் வந்திருந்தார். அப்போது பேசிய வெற்றிமாறன், ‛ரொம்ப நாளாவே வாடிவாசல் வருது வருதுன்னு சொல்லிக் கொண்டிருக்கிறோம். கூடிய சீக்கிரமே படத்தை ஸ்டார்ட் பண்ணி விடுவோம்' என்று கூறினார். இதன் மூலம் வாடிவாசல் கைவிடப்படவில்லை. விரைவில் தொடங்கப்படும் என்பது உறுதியாகி இருக்கிறது.