எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் |

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்க இருந்த வாடிவாசல் படம் தொடங்க இருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பே பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதோடு இந்த படத்தின் வி.எப்.எக்ஸ் வேலைகள் வெளிநாட்டில் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் திடீரென அப்படத்தின் வேலைகள் கைவிடப்பட்டு வெற்றிமாறனும், சூர்யாவும் வெவ்வேறு படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்கள்.
ஒரு கட்டத்தில் வாடிவாசல் படத்தில் தனுஷ் நடிக்க போவதாகவும் செய்திகள் வந்தன. என்றாலும் அது குறித்து படத்தை தயாரிக்கும் எஸ். தாணுவிடமிருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இப்படியான நிலையில், சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்து கொண்டார் வெற்றிமாறன். அந்த விழாவுக்கு தயாரிப்பாளர் எஸ்.தாணுவும் வந்திருந்தார். அப்போது பேசிய வெற்றிமாறன், ‛ரொம்ப நாளாவே வாடிவாசல் வருது வருதுன்னு சொல்லிக் கொண்டிருக்கிறோம். கூடிய சீக்கிரமே படத்தை ஸ்டார்ட் பண்ணி விடுவோம்' என்று கூறினார். இதன் மூலம் வாடிவாசல் கைவிடப்படவில்லை. விரைவில் தொடங்கப்படும் என்பது உறுதியாகி இருக்கிறது.