அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
தமிழ் சினிமாவில் அந்தக்கால கிளாசிக் படங்கள் என்றால் சந்திரலேகா, ஸ்ரீவள்ளி, மதுரை வீரன், வீரபாண்டிய கட்டபொம்மன், தில்லானா மோகனாம்பாள், அடிமைப்பெண் இப்படியான படங்கள்தான் நினைவுக்கு வரும். இந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டிய 'ஆரவல்லி' ஏனோ இடம் பெறவில்லை.
ஆண்கள் செய்யும் வேலைகளை எல்லாம் பெண்கள் பார்த்துக் கொள்வார்கள், பெண்கள் செய்யும் வேலைகளை எல்லாம் ஆண்கள் செய்ய வேண்டும். ஆண்கள் இனி பெண்களுக்கு அடிமைகள். இப்படி ஒரு சட்டம் நாட்டில் இருந்தால் எப்படி இருக்கும் அதுதான் 'ஆரவல்லி' படம்.
மகாபாரதத்தின் கிளை கதைகளில் ஒன்றுதான் ஆரவல்லி சூரவல்லியின் கதை. பஞ்சபாண்டவர்களுக்கும் துரியோதனன் சகோதர்களுக்கும் பகை ஏற்படாமல் ஒற்றுமையாக வாழ்ந்த காலத்தில் துவாரகையிலிருந்து வந்த கிருஷ்ணன் ஒரு சேதி சொன்னார். அதாவது, “ஆரவல்லி, சூரவல்லி, என்ற பெண்கள் நெல்லூரு பட்டணம் எனப்பட்ட ஆரவல்லி நாட்டை ஆண்டு வருகின்றனர். அவர்கள் மொத்தம் 7 பேர். மாயவித்தைகள் தெரிந்த அவர்கள் வஞ்சகமான போட்டிகள் வைத்து ஆண்களை அடிமையாக்கி வைத்து இருக்கிறார்கள். அவர்களை அடக்கி அடிமையானவர்களை விடுதலை செய்தால் உங்களுக்கு கீர்த்தி உண்டாகும்”. என்று சொல்கிறார். உடனே பீமன் கிளம்புகிறான். பீமனால் அதை செய்ய முடிந்ததா என்பதுதான் புராணக் கதை.
இதை அந்த காலத்திலேயே பிரமாண்டமாக தயாரித்தது மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனம். மைனாவதி, ஜி.வரலட்சுமி, எஸ்.ஜி.ஈஸ்வர், ஏ.கருணாநிதி, எம்.என்.கிருஷ்ணன், கே.சாய்ராமன், காக்கா ராதாகிருஷ்ணன், சட்டம்பிள்ளை வெங்கட்ராமன், ஆழ்வார் குப்புசாமி, ஜெயக்கொடி கே.நடராஜன், டி.என்.சிவதாணு, எஸ்.எஸ்.சிவசூரியன், எஸ்.மோகனா, சிங்காரம், வி.கோபாலகிருஷ்ணன், எஸ்.எம்.திருப்பதிசாமி, ஜி.சகுந்தலா, எம்.சரோஜா, டி.பி.முத்துலட்சுமி உள்பட பலர் நடித்திருந்தனர். கிருஷ்ணா ராவ் இயக்கி இருந்தார், ஜி.ராமநாத ஐயர் இசை அமைத்திருந்தார். 1957ம் ஆண்டு வெளிவந்தது.