இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகை சமந்தா தனது இணைய பக்கத்தில் ஹைட்ரஜன் பெராக்ஸைடை சுவாசித்தால் சில பிரச்னைகள் தீர்ந்துவிடும். அதனால் தேவை இல்லாமல் மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டாம் என்று ஒரு பதிவு போட்டிருந்தார். இதற்கு டாக்டர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் என்பவர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அதோடு ஹைட்ரஜன் பெராக்ஸைடை நெபுலைசரில் சுவாசிப்பது ஆபத்தானது என்று சமந்தாவுக்கு ஒரு கண்டன பதிவு வெளியிட்டதோடு, அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து சமந்தா அதற்கு ஒரு விளக்கம் அளித்தார். அதில், அவர் ஒரு டாக்டர் என்பதால் மருத்துவம் சம்பந்தமான விஷயங்களை தெரிந்திருப்பார். என்றாலும் என்னைப் பற்றி அவர் பேசிய வார்த்தைகள் கடுமையாக உள்ளது. என்னை சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நான் ஒரு பிரபலமாக இருப்பதால் இது போன்ற விஷயங்களை எல்லாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் என்னை அவர் விமர்சிப்பதற்கு பதிலாக எனது மருத்துவரிடம் நேருக்கு நேர் உரையாற்றுவது சரியாக இருக்கும் என்று ஒரு பதிவு போட்டிருந்தார் சமந்தா.
இந்த நிலையில் தற்போது அந்த டாக்டர் சமந்தாவுக்கு வருத்தம் தெரிவித்து ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், மருத்துவம் குறித்த அறிவில்லாதவர் என்று சொல்லி சமந்தாவை காயப்படுத்துவது எனது நோக்கம் அல்ல. அவர் தவறான நோக்கத்துடன் இதை செய்யவில்லை என்றும் எனக்கு தெரியும். ஆனால் சமந்தா போன்றவர்களை கோடிக்கணக்கானோர் பாலோ செய்து வருவதால் ஆபத்து உள்ளது என்பதால் அதை தடுக்கவே நான் அப்படி பேசினேன். அதற்காக சமந்தாவிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்றாலும் இந்த தவறை அவர் இனிமேலும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று அந்த டாக்டர் தெரிவித்துள்ளார்.