சசிகுமார், சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய படம் துவக்கம் | விஜய் 69 : புரட்சிகரமான அரசியல் படமாம் | மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஜோடியாக ஆத்மிகா | ‛கேப்டன்' பாடல், போஸ்டருக்கெல்லாம் காப்புரிமை கேட்க மாட்டோம் : பிரேமலதா | திருப்பதி ‛லட்டு' பற்றிய கேள்வி : ‛நோ கமென்ட்ஸ்' என்ற ரஜினி | ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை எச்சரித்த வேதிகா | 'மெய்யழகன்' நீளம் குறைக்கப்படுமா? - பிடிவாதம் பிடிக்கும் பிரேம்குமார் | என்கவுன்டர் அதிகாரியின் இன்னொரு பக்கம் : வேட்டையன் குறித்து பேசிய ஞானவேல் | இயக்குனர் சுகுமாருக்கு எல்லா விஷயமும் தெரியும் : ஜானி மாஸ்டர் வாக்குமூலம் | ஒரு வார இடைவெளியில் வெளியாகும் பஹத் பாசிலின் 2 படங்கள் |
லெஜெண்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரபல ஜவுளிக் கடை அதிபர் அருள் சரவணன். அதையடுத்து தனக்கு பொருத்தமான கதை தேடலில் ஈடுபட்டிருந்த அவர், பல இயக்குனர்களிடத்தில் கதை கேட்டு வந்தார். இந்த நிலையில், துரை செந்தில்குமார் சொன்ன கதை பிடித்து விட்டதை அடுத்து அவர் இயக்கத்தில் அடுத்து நடிக்க போகிறார். அதை உறுதிப்படுத்தும் வகையில், படப்பிடிப்பு தளத்தில் துரை செந்தில் குமாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் லெஜண்ட் சரவணன். அதோடு படப்பிடிப்பு துவங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ், கருடன் உள்ளிட்ட பல படங்களை துரை செந்தில்குமார் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.