லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி |
லெஜெண்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரபல ஜவுளிக் கடை அதிபர் அருள் சரவணன். அதையடுத்து தனக்கு பொருத்தமான கதை தேடலில் ஈடுபட்டிருந்த அவர், பல இயக்குனர்களிடத்தில் கதை கேட்டு வந்தார். இந்த நிலையில், துரை செந்தில்குமார் சொன்ன கதை பிடித்து விட்டதை அடுத்து அவர் இயக்கத்தில் அடுத்து நடிக்க போகிறார். அதை உறுதிப்படுத்தும் வகையில், படப்பிடிப்பு தளத்தில் துரை செந்தில் குமாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் லெஜண்ட் சரவணன். அதோடு படப்பிடிப்பு துவங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ், கருடன் உள்ளிட்ட பல படங்களை துரை செந்தில்குமார் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.