ஹிந்தியில் அறிமுகமாகும் பஹத் பாசில் | ராம், மிரிச்சி சிவா படத்தின் டப்பிங் பணி தொடங்கியது | சீமான், சிவகார்த்திகேயன் சந்திப்பு பின்னனி என்ன? | கண்டதற்கு எல்லாம் பொங்கும் போராளி நடிகர்கள் கள்ளச்சாராய சாவில் ‛கள்ள மவுனம்' ஏன்? | கள்ளக்குறிச்சி சென்ற விஜய் : பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் | அந்த நடிகையின் சாயலில் இருந்ததால்தான் பாலிவுட் பட வாய்ப்பே கிடைத்தது : டாப்ஸி | வில்லன் ரோலை விரும்பும் கமல் | கள்ளச்சாராயம், போதை பொருளை ஒழிக்க வேண்டும் : விஷால் | கள்ளச்சாராய வியாபாரிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : கமல் | தனுஷை இயக்கும் போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா |
ஆந்திர மாநில அரசியலில் மாற்றம் வந்தாலும் வந்தது, சிரஞ்சீவி குடும்பத்திலும் மாற்றம் வந்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகர் சிரஞ்சீவியின் மைத்துனர் மகன்தான் அல்லு அர்ஜூன். சிரஞ்சீவி குடும்பத்தில் உள்ள மற்ற வாரிசு நடிகர்களை விடவும் அல்லு அர்ஜூனுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.
சிரஞ்சீவியின் சகோதரி விஜயதுர்காவின் மகன் நடிகர் சாய் தரம் தேஜ், தனது மாமாவான பவன் கல்யாண் மீது அதிக பாசம் வைத்துள்ளவர். நடந்து முடிந்த தேர்தலில் பவன் கல்யாண் வெற்றியை அதிகம் கொண்டாடியவர். நேற்று பவன் பதவி ஏற்று முடித்ததும் அவரைக் கட்டித் தழுவி வாழ்த்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவர்.
இந்நிலையில் சாய் தரம் தேஜ், தற்போது நடிகர் அல்லு அர்ஜூனை சமூக வலைத்தளங்களில் 'அன்பாலோ' செய்துவிட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். சிரஞ்சீவி குடும்பத்திற்கும், அல்லு அர்ஜூன் குடும்பத்திற்கும் இடையேயான மோதலாக இது பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் அல்லு அர்ஜூன் அவரது நண்பரான ஒய்எஸ்ஆர் கட்சியின் நந்தியால் வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்தார். பவன் கல்யாண் தொகுதிக்கு அவர் செல்லவேயில்லை. அப்போதே இந்த விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டது. நேற்று நடந்த பதவியேற்பு விழாவிலும் அர்ஜூன் கலந்து கொள்ளவில்லை. இது அவரின் திரையுலக வாழ்க்கையை எந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது இனிமேல்தான் தெரியும்.