ஸ்ருதிஹாசன் 40வது பிறந்தநாள் : தம் அடிக்கிற போஸ்டர் வெளியீடு | திறமை இறுதியில் அங்கீகரிக்கப்படும்: ரகுல் ப்ரீத் சிங் | மீண்டும் ஜி.வி.பிரகாஷ் உடன் இணையும் ‛ஹாட்ஸ்பாட் 2' இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் | 8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு மவுனப் படம் 'காந்தி டாக்ஸ்' | தெலுங்கு திரையுலகை அதிர வைத்த இரண்டு தோல்விகள் | 'வேள்பாரி' பட வேலைகள் ஆரம்பமாகி உள்ளதா? | 'ராஜா' என்ற பெயரும் 'காப்பிரைட்'டில் வருகிறதா? | வழக்கை வாபஸ் பெறுகிறதா 'ஜனநாயகன்' குழு | லாக் டவுன் கதை இதுவா? | தீபிகா படுகோனே எனது லக்கி நடிகை: காரணம் சொல்கிறார் அட்லி! |

டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (ஜூன் 09) இரவு 7:15 மணிக்கு பிரதமர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதில் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினி சென்னையில் இருந்து டில்லிக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.
முன்னதாக, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஜவஹர்லால் நேருக்கு பிறகு 3வது முறையாக, பிரதமராக மோடி பதவியேற்பது மகத்தான சாதனை. லோக்சபா தேர்தலில், மக்கள் வலுவான எதிர்க்கட்சியை தேர்வு செய்துள்ளனர். வலுவான எதிர்க்கட்சியை தேர்வு செய்தது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான அறிகுறி. விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை மாநில கட்சிகளாக அங்கீகாரம் பெற்றதற்கு திருமாவளவன், சீமானுக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு ரஜினி கூறினார்.




