மருதத்தில் ஏமாற்றப்படும் விவசாயிகளின் கதை: விதார்த் | பிளாஷ்பேக்: சர்ச்சையில் சிக்கிய 'மனிதன்' | வெப் தொடரில் நடிக்கும் பிரியங்கா மோகன்! | 'ஓஜி' படத்திற்கான கட்டண உயர்வு: நீதிமன்றம் தடை | ரவி மோகனுக்கு அடுத்த நெருக்கடி : வீட்டு முன் ஜப்தி நோட்டீஸ் ஒட்டிய வங்கி அதிகாரிகள் | புரமோஷனுக்காக டிரைவராக மாறிய இசையமைப்பாளர் தமன் | ரசிகையை அவமதித்தேனா? : நடிகர் ஷேன் நிகம் விளக்கம் | மறைந்த தாயார் ஸ்ரீதேவி அணிந்த நீல நிற சேலையில் கவனம் பெற்ற ஜான்வி கபூர்! | காய்ச்சல் காரணமாக ஓஜி புரமோஷன் நிகழ்ச்சிகளை தவிர்த்த பவன் கல்யாண் | தான் இறந்து விட்டதாக வதந்தி! பதிலடி கொடுத்த நடிகர் பார்த்திபன்!! |
டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (ஜூன் 09) இரவு 7:15 மணிக்கு பிரதமர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதில் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினி சென்னையில் இருந்து டில்லிக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.
முன்னதாக, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஜவஹர்லால் நேருக்கு பிறகு 3வது முறையாக, பிரதமராக மோடி பதவியேற்பது மகத்தான சாதனை. லோக்சபா தேர்தலில், மக்கள் வலுவான எதிர்க்கட்சியை தேர்வு செய்துள்ளனர். வலுவான எதிர்க்கட்சியை தேர்வு செய்தது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான அறிகுறி. விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை மாநில கட்சிகளாக அங்கீகாரம் பெற்றதற்கு திருமாவளவன், சீமானுக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு ரஜினி கூறினார்.