15 வயதில் என் போட்டோவை மார்பிங் செய்தனர் : ஜான்வி கபூர் வேதனை | சுந்தர்.சிக்கு ஆதரவாக விஷால்... எதிராக வடிவேலு? | டிரைலருக்கு தனி எடிட்டர் தேவையா? கேள்வி எழுப்பும் தயாரிப்பாளர் | 'யூத் 2' உருவாகுமா? கென் கையில் முடிவு | ஏப்ரல் 10ல் ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி | அடுத்த வாரிசு நடிகை… பிரியங்கா ராஜகுமாரன் | டாக்டர் ராஜசேகருக்கு 'கம்பேக்' கொடுத்த 'பைக்கர்' | மழையால் 'எல்ஐகே' விழா தள்ளி வைப்பு | விஜய் சுட்ட 13வது ஆள் நான் தான் : விக்னேஷ் சிவன் | ‛ரஞ்ஜன்' ஆன ‛கோர்ட்' : அப்பா தியாகராஜன் இயக்கத்தில் மகன் பிரசாந்த் நடிக்கிறார் |

டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (ஜூன் 09) இரவு 7:15 மணிக்கு பிரதமர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதில் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினி சென்னையில் இருந்து டில்லிக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.
முன்னதாக, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஜவஹர்லால் நேருக்கு பிறகு 3வது முறையாக, பிரதமராக மோடி பதவியேற்பது மகத்தான சாதனை. லோக்சபா தேர்தலில், மக்கள் வலுவான எதிர்க்கட்சியை தேர்வு செய்துள்ளனர். வலுவான எதிர்க்கட்சியை தேர்வு செய்தது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான அறிகுறி. விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை மாநில கட்சிகளாக அங்கீகாரம் பெற்றதற்கு திருமாவளவன், சீமானுக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு ரஜினி கூறினார்.