நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
மலையாள முன்னணி நடிகர் பிரித்விராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன்லாலை வைத்து இயக்கிய லூசிபர் என்கிற படத்தின் மூலம் ஒரு வெற்றிகரமான இயக்குனராகவும் தன்னை வெளிப்படுத்தினார். அந்த சமயத்தில் லூசிபர் படம் வெளியான போது அதுதான் மலையாள திரையுலகிலேயே அதிகம் வசூலித்த படம் என்கிற பெருமையும் பெற்றது. அதைத் தொடர்ந்து லூசிபர் படத்திற்கு இரண்டாம் பாகமும் இருக்கிறது என்று இவர்கள் கூறிய நாளிலிருந்து அந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் தற்போது லூசிபர் 2வில் இரண்டாம் பாகமாக எம்புரான் என்கிற படத்தை துவங்கி படப்பிடிப்பை நடத்தி வருகிறார் பிரித்விராஜ்.
இந்த படத்தில் ஏற்கனவே முதல் பாகத்தில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் தவிர பல புதிய நடிகர்களும் அவ்வப்போது இணைந்து வருகின்றனர். அந்த வகையில் கைதி, விக்ரம் ஆகிய படங்களில் வில்லனாக கவனிக்க வைத்து, தற்போது கதாநாயகனாகவும் நடித்து வரும் அர்ஜூன் தாஸ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். படப்பிடிப்பில் இருந்து இவரது புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் கசிந்து அவர் இந்த படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. அந்த வகையில் அர்ஜூன் தாஸ் நடிக்கும் முதல் மலையாள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.