விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
மலையாள முன்னணி நடிகர் பிரித்விராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன்லாலை வைத்து இயக்கிய லூசிபர் என்கிற படத்தின் மூலம் ஒரு வெற்றிகரமான இயக்குனராகவும் தன்னை வெளிப்படுத்தினார். அந்த சமயத்தில் லூசிபர் படம் வெளியான போது அதுதான் மலையாள திரையுலகிலேயே அதிகம் வசூலித்த படம் என்கிற பெருமையும் பெற்றது. அதைத் தொடர்ந்து லூசிபர் படத்திற்கு இரண்டாம் பாகமும் இருக்கிறது என்று இவர்கள் கூறிய நாளிலிருந்து அந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் தற்போது லூசிபர் 2வில் இரண்டாம் பாகமாக எம்புரான் என்கிற படத்தை துவங்கி படப்பிடிப்பை நடத்தி வருகிறார் பிரித்விராஜ்.
இந்த படத்தில் ஏற்கனவே முதல் பாகத்தில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் தவிர பல புதிய நடிகர்களும் அவ்வப்போது இணைந்து வருகின்றனர். அந்த வகையில் கைதி, விக்ரம் ஆகிய படங்களில் வில்லனாக கவனிக்க வைத்து, தற்போது கதாநாயகனாகவும் நடித்து வரும் அர்ஜூன் தாஸ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். படப்பிடிப்பில் இருந்து இவரது புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் கசிந்து அவர் இந்த படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. அந்த வகையில் அர்ஜூன் தாஸ் நடிக்கும் முதல் மலையாள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.