பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மலையாள முன்னணி நடிகர் பிரித்விராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன்லாலை வைத்து இயக்கிய லூசிபர் என்கிற படத்தின் மூலம் ஒரு வெற்றிகரமான இயக்குனராகவும் தன்னை வெளிப்படுத்தினார். அந்த சமயத்தில் லூசிபர் படம் வெளியான போது அதுதான் மலையாள திரையுலகிலேயே அதிகம் வசூலித்த படம் என்கிற பெருமையும் பெற்றது. அதைத் தொடர்ந்து லூசிபர் படத்திற்கு இரண்டாம் பாகமும் இருக்கிறது என்று இவர்கள் கூறிய நாளிலிருந்து அந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் தற்போது லூசிபர் 2வில் இரண்டாம் பாகமாக எம்புரான் என்கிற படத்தை துவங்கி படப்பிடிப்பை நடத்தி வருகிறார் பிரித்விராஜ்.
இந்த படத்தில் ஏற்கனவே முதல் பாகத்தில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் தவிர பல புதிய நடிகர்களும் அவ்வப்போது இணைந்து வருகின்றனர். அந்த வகையில் கைதி, விக்ரம் ஆகிய படங்களில் வில்லனாக கவனிக்க வைத்து, தற்போது கதாநாயகனாகவும் நடித்து வரும் அர்ஜூன் தாஸ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். படப்பிடிப்பில் இருந்து இவரது புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் கசிந்து அவர் இந்த படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. அந்த வகையில் அர்ஜூன் தாஸ் நடிக்கும் முதல் மலையாள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.