ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! | ‛ஜெயிலர் 2' சஸ்பென்ஸை உடைத்த சிவராஜ் குமார் | சாதனை விலைக்கு விற்கப்பட்டதா 'டாக்சிக்' வெளிநாட்டு உரிமை ? | மீனவர் பிரச்னையை தனித்துவமாக பேசும் 'வலை': இரட்டை வேடங்களில் நடிக்கிறார் அதர்வா | வையாபுரிக்கு ஜோடியான ‛பிக்பாஸ்' தாமரை | இளையராஜா இசையமைக்கும் ‛சைலப்பன் சைக்களிள் மார்ட்' | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் 17ம் தேதி ஆஜராக நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன் |

மலையாள முன்னணி நடிகர் பிரித்விராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன்லாலை வைத்து இயக்கிய லூசிபர் என்கிற படத்தின் மூலம் ஒரு வெற்றிகரமான இயக்குனராகவும் தன்னை வெளிப்படுத்தினார். அந்த சமயத்தில் லூசிபர் படம் வெளியான போது அதுதான் மலையாள திரையுலகிலேயே அதிகம் வசூலித்த படம் என்கிற பெருமையும் பெற்றது. அதைத் தொடர்ந்து லூசிபர் படத்திற்கு இரண்டாம் பாகமும் இருக்கிறது என்று இவர்கள் கூறிய நாளிலிருந்து அந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் தற்போது லூசிபர் 2வில் இரண்டாம் பாகமாக எம்புரான் என்கிற படத்தை துவங்கி படப்பிடிப்பை நடத்தி வருகிறார் பிரித்விராஜ்.
இந்த படத்தில் ஏற்கனவே முதல் பாகத்தில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் தவிர பல புதிய நடிகர்களும் அவ்வப்போது இணைந்து வருகின்றனர். அந்த வகையில் கைதி, விக்ரம் ஆகிய படங்களில் வில்லனாக கவனிக்க வைத்து, தற்போது கதாநாயகனாகவும் நடித்து வரும் அர்ஜூன் தாஸ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். படப்பிடிப்பில் இருந்து இவரது புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் கசிந்து அவர் இந்த படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. அந்த வகையில் அர்ஜூன் தாஸ் நடிக்கும் முதல் மலையாள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.




