இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
அந்த காலத்தில் ஒலிசித்திரம் என்ற பெயரில் ஒரு படத்தின் வசனத்தை மட்டும் ஒலிபரப்புவார்கள். திருவிளையாடல், சரஸ்வதி சபதம், மதுரை வீரன், வீரபாண்டிய கட்டபொம்மன், பட்டிக்காடா பட்டணமா, பிற்காலத்தில் விதி, திரிசூலம், கவுரவம் உள்ளிட்ட படங்கள் ஒலிசித்திரத்தின் மூலம்தான் மக்களிடம் அதிக அளவில் சென்றடைந்தது.
இந்த கான்செப்டில் உருவானதுதான் ஆடியோ ஓடிடி. ரீஜனல் ஸ்டோரி டெல்லர்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெங்கடாசலம் 'ரேடியோ ரூம்' என்ற பெயரில் இதனை தொடங்கி உள்ளார். இதன் துவக்க விழா நடந்தது. இதில் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, இயக்குநர் சசி, இயக்குநர் ஸ்டான்லி, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் நடிகர் ஜான் விஜய் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஓடிடி மூலம் முதலில் கதைகளும், நாவல்களும் ஆடியோ நாடகங்களாக மாற்றப்பட்டு பொருத்தமான குரல்கள், இதற்காகவே உருவாக்கிய இசை மற்றும் சிறப்பு சப்தங்கள் சேர்க்கப்பட்டு வெளியிடப்படுகிறது. பழம்பெரும் எழுத்தாளர்களின் கதைகளும், நடுத்தர கால மற்றும் சமகால எழுத்தாளர்களின் படைப்புகளும் உள்ளன. அறிமுக மற்றும் இளம் எழுத்தாளர்களின் கதைகளும், தமிழ் கதைகளும் ஈழத் தமிழ் கதைகளும் இடம் பெற்றுள்ளன. தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட கதைகளும் தயாரிப்பில் உள்ளன. தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்களின் ஆடியோக்களை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.