பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

மெட்ரோ ரயில் பணி அதிகாரியை தாக்கிய வழக்கில் பின்னணி பாடகர் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.
தமிழ் சினிமாவில் ஏராளமான கிராமத்து பின்னணி கொண்ட பாடல்களை பாடி பிரபலமானவர் வேல்முருகன். சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் இரவு நேரங்களில் ஆற்காடு சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு இந்த வழியாக வேல்முருகன் காரில் வந்துள்ளார். ஒருவழி பாதையில் அவர் தடுப்புகளை நகற்றி காரை எடுத்து செல்ல முயன்றுள்ளார். அவரை அங்கு பணியில் இருந்த மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவனத்தின் உதவி மேலாளர் வடிவேலு தடுத்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வடிவேலுவை வேல்முருகன் தாக்கியதாகவும், ஆபாச வார்த்தைகளில் பேசியதாகவும் தெரிகிறது. வேல்முருகன் தாக்கியதில் காயமடைந்த வடிவேலு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இதையடுத்து சென்னை விருகம்பாக்கம் போலீஸில் வேல்முருகன் மீது வடிவேலு புகார் அளித்தார். அதன்பேரில் தாக்குதல் மற்றும் ஆபாசமாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.