ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

மெட்ரோ ரயில் பணி அதிகாரியை தாக்கிய வழக்கில் பின்னணி பாடகர் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.
தமிழ் சினிமாவில் ஏராளமான கிராமத்து பின்னணி கொண்ட பாடல்களை பாடி பிரபலமானவர் வேல்முருகன். சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் இரவு நேரங்களில் ஆற்காடு சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு இந்த வழியாக வேல்முருகன் காரில் வந்துள்ளார். ஒருவழி பாதையில் அவர் தடுப்புகளை நகற்றி காரை எடுத்து செல்ல முயன்றுள்ளார். அவரை அங்கு பணியில் இருந்த மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவனத்தின் உதவி மேலாளர் வடிவேலு தடுத்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வடிவேலுவை வேல்முருகன் தாக்கியதாகவும், ஆபாச வார்த்தைகளில் பேசியதாகவும் தெரிகிறது. வேல்முருகன் தாக்கியதில் காயமடைந்த வடிவேலு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இதையடுத்து சென்னை விருகம்பாக்கம் போலீஸில் வேல்முருகன் மீது வடிவேலு புகார் அளித்தார். அதன்பேரில் தாக்குதல் மற்றும் ஆபாசமாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.