அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
மெட்ரோ ரயில் பணி அதிகாரியை தாக்கிய வழக்கில் பின்னணி பாடகர் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.
தமிழ் சினிமாவில் ஏராளமான கிராமத்து பின்னணி கொண்ட பாடல்களை பாடி பிரபலமானவர் வேல்முருகன். சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் இரவு நேரங்களில் ஆற்காடு சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு இந்த வழியாக வேல்முருகன் காரில் வந்துள்ளார். ஒருவழி பாதையில் அவர் தடுப்புகளை நகற்றி காரை எடுத்து செல்ல முயன்றுள்ளார். அவரை அங்கு பணியில் இருந்த மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவனத்தின் உதவி மேலாளர் வடிவேலு தடுத்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வடிவேலுவை வேல்முருகன் தாக்கியதாகவும், ஆபாச வார்த்தைகளில் பேசியதாகவும் தெரிகிறது. வேல்முருகன் தாக்கியதில் காயமடைந்த வடிவேலு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இதையடுத்து சென்னை விருகம்பாக்கம் போலீஸில் வேல்முருகன் மீது வடிவேலு புகார் அளித்தார். அதன்பேரில் தாக்குதல் மற்றும் ஆபாசமாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.