நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
ஜீவி, ஜீவி 2, மெர்லின் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் அஸ்வினி சந்திரசேகர். தனக்கான ஒரு இடத்தை பிடிக்க தொடர்ந்து போராடுகிறார். இந்த நிலையில் தற்போது அவர் நடித்து வரும் படம் 'கங்கணம்'. இதில் கூத்துப்பட்டறை சவுந்தர் நாயகனாக நடிக்கிறார். இவர்கள் தவிர பிரணா, சிரஞ்சன், சரவணன், சம்பத்ராம், அட்ரஸ் கார்த்திக், 'விஜய் டிவி' ராமர் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.ஏ.சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்குச் செல்வா இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் இசையரசன் கூறும்போது “ஊரையே மிரட்டிக் கொண்டிருக்கிற வில்லன், நாயகன் குடும்பத்தில் கொடூரமான சம்பவம் ஒன்றை செய்கிறார். ஒரு போலீஸ் அதிகாரியையும் அவமானப்படுத்தி விடுகிறார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தொல்லை கொடுக்கிறார். பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் குழுவாக இணைந்து பழிவாங்கக் கங்கணம் கட்டுகிறார்கள். அதைச் செய்தார்களா? இல்லையா? என்பது கதை. படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.