கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி | ஆஸ்கர் மியூசியத்தில் திரையிடப்படும் 'பிரம்மயுகம்' |

கடந்த வருடம் சமந்தா நடிப்பில் சாகுந்தலம் மற்றும் குஷி என இரண்டு படங்கள் தெலுங்கில் வெளியாகின. இதில் குஷி ஓரளவு டீசன்டான வெற்றியை பெற்றது. இந்த நிலையில் சமந்தாவின் 37வது பிறந்த நாளான நேற்று அவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு ஒன்றை அவரே தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
மா இன்டி பங்காரம் என இப்படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2006ல் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான பங்காரம் என்கிற படத்தின் டைட்டிலை மீண்டும் இந்தப்படத்திற்கு வைத்துள்ளார்கள். அதேசமயம் படத்தின் இயக்குனர் மற்றும் உடன் நடிப்பவர்கள் குறித்த விவரம் எதுவும் தற்போது வெளியாகவில்லை.
இந்தப் படம் குறித்து குறிப்பிட்டுள்ள சமந்தா, “தங்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக எல்லாமே மினுமினுக்க வேண்டியது இல்லை” என்று கூறியுள்ளார். மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்கிற பழமொழியை அப்படியே உல்டாவாக மாற்றி இந்த படத்தின் கரு குறித்து சமந்தா கூறியுள்ளார் என்று தெரிகிறது.
இந்த படத்தில் சமந்தா ஒரு புரட்சிப்பெண்ணாக நடிக்கிறார் என்பது இதுகுறித்து வெளியாகி உள்ள போஸ்டரில் அவர் இரட்டை குழல் துப்பாக்கியை வைத்துக் கொண்டிருப்பதை பார்க்கும்போதே புரிந்து கொள்ள முடிகிறது.