விருதுகளை விட ரசிகர்களின் அன்புதான் முக்கியம் : சாய் பல்லவி | இனி இப்படி பேசமாட்டேன் ; கடும் எதிர்ப்புக்கு அடிபணிந்த மகாராஜா வில்லன் | மோகன்லால் பட ரீமேக்கில் கண் பார்வையற்றவராக நடிக்கும் சைப் அலிகான் | நடிகையிடம் மன்னிப்பு கேட்ட போதை வில்லன் நடிகர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தில் 20 ஆக்ஷன் காட்சிகள் | எனக்கு ஒளியும் சக்தியுமாய் இருப்பது நீங்கள்தான் அப்பா : ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பதிவு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் : ரம்யா சுப்பிரமணியன் எச்சரிக்கை | விமர்சனங்களைத் தடுக்க முடியுமா : நானி சொல்லும் ஆலோசனை | பாதாள பைரவி : மீட்டு பாதுகாத்த இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் | ரெய்டு 2வில் இருந்து யோ யோ ஹனி சிங் பாடிய ‛மணி மணி' பாடல் வெளியீடு |
கடந்த வருடம் சமந்தா நடிப்பில் சாகுந்தலம் மற்றும் குஷி என இரண்டு படங்கள் தெலுங்கில் வெளியாகின. இதில் குஷி ஓரளவு டீசன்டான வெற்றியை பெற்றது. இந்த நிலையில் சமந்தாவின் 37வது பிறந்த நாளான நேற்று அவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு ஒன்றை அவரே தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
மா இன்டி பங்காரம் என இப்படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2006ல் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான பங்காரம் என்கிற படத்தின் டைட்டிலை மீண்டும் இந்தப்படத்திற்கு வைத்துள்ளார்கள். அதேசமயம் படத்தின் இயக்குனர் மற்றும் உடன் நடிப்பவர்கள் குறித்த விவரம் எதுவும் தற்போது வெளியாகவில்லை.
இந்தப் படம் குறித்து குறிப்பிட்டுள்ள சமந்தா, “தங்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக எல்லாமே மினுமினுக்க வேண்டியது இல்லை” என்று கூறியுள்ளார். மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்கிற பழமொழியை அப்படியே உல்டாவாக மாற்றி இந்த படத்தின் கரு குறித்து சமந்தா கூறியுள்ளார் என்று தெரிகிறது.
இந்த படத்தில் சமந்தா ஒரு புரட்சிப்பெண்ணாக நடிக்கிறார் என்பது இதுகுறித்து வெளியாகி உள்ள போஸ்டரில் அவர் இரட்டை குழல் துப்பாக்கியை வைத்துக் கொண்டிருப்பதை பார்க்கும்போதே புரிந்து கொள்ள முடிகிறது.