கராத்தே பாபு படத்தின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனர் பாக்யராஜ்க்கு டாக்டர் பட்டம் | தனுஷ் 55வது படம் பூஜையுடன் துவக்கம் : ஷங்கர், எஸ்ஜே சூர்யா பங்கேற்பு | மீண்டும் அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் ராஷ்மிகா மந்தனா | ரவீனா ரவிக்கு இன்ஸ்டாகிராமில் தொல்லை கொடுத்த மர்ம ஆசாமிகள் | டூப் போடாமல் சண்டைக்காட்சியில் நடிக்கும் சம்யுக்தா | குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன் | சித்தப்பாவுக்காக வழி விட்டு ஒதுங்கினாரா ராம்சரண்? | ஆக்சன் காட்சிகளை படமாக்க பிப்ரவரியில் ஜோர்டனுக்கு பறக்கும் டிராகன் குழு | ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் மூன்று இளம் பெண்கள் தற்கொலை ; சோனு சூட் வருத்தம் கலந்த எச்சரிக்கை |

சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படத்தின் மூன்று பாகங்கள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது நான்காவது பாகம் மே மூன்றாம் தேதி திரைக்கு வரப்போகிறது. சுந்தர்.சி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் தமன்னாவும், ராஷி கண்ணாவும் ஒரு பாடலில் போட்டி போட்டு கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார்கள்.
அரண்மனை 4 படத்தில் நடித்த சில அனுபவங்களை புகைப்படம் மற்றும் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார் தமன்னா. அதில், ஒரு சண்டை காட்சிகள் ரோப் கட்டி அந்தரத்தில் தொங்கும் வீடியோ இடம்பெற்றுள்ளது.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛அரண்மனை 4 படம் ரசிகர்களை பெரிய அளவில் பயமுறுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த படம் திரைக்கு வந்த பிறகு சில இனிமையான அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இதில் நடித்தது சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது. சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்திருக்கிறேன்'' என்கிறார் தமன்னா.




