நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படத்தின் மூன்று பாகங்கள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது நான்காவது பாகம் மே மூன்றாம் தேதி திரைக்கு வரப்போகிறது. சுந்தர்.சி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் தமன்னாவும், ராஷி கண்ணாவும் ஒரு பாடலில் போட்டி போட்டு கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார்கள்.
அரண்மனை 4 படத்தில் நடித்த சில அனுபவங்களை புகைப்படம் மற்றும் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார் தமன்னா. அதில், ஒரு சண்டை காட்சிகள் ரோப் கட்டி அந்தரத்தில் தொங்கும் வீடியோ இடம்பெற்றுள்ளது.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛அரண்மனை 4 படம் ரசிகர்களை பெரிய அளவில் பயமுறுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த படம் திரைக்கு வந்த பிறகு சில இனிமையான அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இதில் நடித்தது சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது. சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்திருக்கிறேன்'' என்கிறார் தமன்னா.