‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழில் பொங்கியெழு மனோகரா, சைத்தான் போன்ற படங்களில் நடித்தவர் மலையாள நடிகை அருந்ததி நாயர். கடந்த மாதம் இவர் தன்னுடைய சகோதரருடன் பைக்கில் சென்றபோது வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டது. அதில் தூக்கி வீசப்பட்ட அருந்ததி நாயர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது கோமாவில் இருக்கும் அவருக்கு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மூன்று வாரங்களாக சிகிச்சை அளித்து வருகிறார்கள். தினமும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் நாள் ஒன்றுக்கு குறைந்தது இரண்டு லட்சம் ரூபாய் வரை அவரது குடும்பத்தார் செலவு செய்து வருவதோடு, இதுவரை 40 லட்சம் ரூபாய் செலவாகி விட்டதாக தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் தற்போது கவலைக்கிடமான நிலையில் இருந்து வரும் அருந்ததியின் சிகிச்சைக்கு திரைஉலகினர் உதவ முன்வருமாறும் அவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.