கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
தமிழில் பொங்கியெழு மனோகரா, சைத்தான் போன்ற படங்களில் நடித்தவர் மலையாள நடிகை அருந்ததி நாயர். கடந்த மாதம் இவர் தன்னுடைய சகோதரருடன் பைக்கில் சென்றபோது வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டது. அதில் தூக்கி வீசப்பட்ட அருந்ததி நாயர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது கோமாவில் இருக்கும் அவருக்கு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மூன்று வாரங்களாக சிகிச்சை அளித்து வருகிறார்கள். தினமும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் நாள் ஒன்றுக்கு குறைந்தது இரண்டு லட்சம் ரூபாய் வரை அவரது குடும்பத்தார் செலவு செய்து வருவதோடு, இதுவரை 40 லட்சம் ரூபாய் செலவாகி விட்டதாக தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் தற்போது கவலைக்கிடமான நிலையில் இருந்து வரும் அருந்ததியின் சிகிச்சைக்கு திரைஉலகினர் உதவ முன்வருமாறும் அவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.