ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! | தனுசை ஆச்சரியப்பட வைத்த இயக்குனர் விக்னேஷ் ராஜா! | 96 பட இயக்குனரிடம் கதை கேட்ட நானி | லிங்குசாமி, சரண் புதிய படத்திற்காக கூட்டணி | இதெல்லாம் டிசம்பர் மாதம் ரிலீஸ் : ரிசல்ட் எப்படி இருக்குமோ? | சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் |

தனுஷ் நடித்த ‛3' என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினி. அதன்பிறகு கவுதம் கார்த்திக் நடித்த ‛வை ராஜா வை' என்ற படத்தை இயக்கியவர், பின்னர் சமீபத்தில் திரைக்கு வந்த ‛லால் சலாம்' என்ற படத்தையும் இயக்கினார்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினி அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛அனிருத், 3 படத்தில் இசையமைப்பாளர் ஆனதற்கு முழு காரணமே தனுஷ்தான்' என்று கூறி இருக்கிறார்.
‛‛அனிருத்தை அவரது பெற்றோர் மேற்படிப்புக்காக வெளிநாடு அனுப்ப திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் அனிருத்தின் இசை திறமையை பார்த்த தனுஷ்தான் அவருக்கு கீப்போர்டு வாங்கி கொடுத்தது மட்டுமின்றி நான் இயக்கிய 3 திரைப்படத்தில் இசையமைப்பாளராகவும் அறிமுகம் செய்தார். அதனால் அனிருத் சினிமாவிற்கு வருவதற்கு தனுஷ்தான் முதல் காரணம். அதே சமயம் அவர் இத்தனை பெரிய இசையமைப்பாளர் ஆனதற்கு முழுக் காரணம் அவரது திறமைதான். அந்த வகையில் அனிருத்தின் இந்த வளர்ச்சி எனக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுக்கிறது'' என்று அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினி.




