20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
தனுஷ் நடித்த ‛3' என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினி. அதன்பிறகு கவுதம் கார்த்திக் நடித்த ‛வை ராஜா வை' என்ற படத்தை இயக்கியவர், பின்னர் சமீபத்தில் திரைக்கு வந்த ‛லால் சலாம்' என்ற படத்தையும் இயக்கினார்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினி அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛அனிருத், 3 படத்தில் இசையமைப்பாளர் ஆனதற்கு முழு காரணமே தனுஷ்தான்' என்று கூறி இருக்கிறார்.
‛‛அனிருத்தை அவரது பெற்றோர் மேற்படிப்புக்காக வெளிநாடு அனுப்ப திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் அனிருத்தின் இசை திறமையை பார்த்த தனுஷ்தான் அவருக்கு கீப்போர்டு வாங்கி கொடுத்தது மட்டுமின்றி நான் இயக்கிய 3 திரைப்படத்தில் இசையமைப்பாளராகவும் அறிமுகம் செய்தார். அதனால் அனிருத் சினிமாவிற்கு வருவதற்கு தனுஷ்தான் முதல் காரணம். அதே சமயம் அவர் இத்தனை பெரிய இசையமைப்பாளர் ஆனதற்கு முழுக் காரணம் அவரது திறமைதான். அந்த வகையில் அனிருத்தின் இந்த வளர்ச்சி எனக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுக்கிறது'' என்று அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினி.