'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு |
தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்கே சுரேஷ் இயக்க உள்ள 'தென் மாவட்டம்' என்ற புதிய படத்தின் முதல் பார்வையை இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். அதில் இசை - யுவன்ஷங்கர் ராஜா என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், இப்படத்திற்காக தன்னை யாரும் அணுகவில்லை, தான் ஒப்பந்தமாகவில்லை என யுவன் சமூக வலைத்தளத்தில் விளக்கம் சொல்லியிருந்தார். அதற்கு பதிலளித்த ஆர்கே சுரேஷ் உங்களது ஒப்பந்தத்தைப் பாருங்கள் எனக் கூறியிருந்தார்.
இது என்ன புது சர்ச்சை என ரசிகர்களும், திரையுலகினரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இந்நிலையில், “தென் மாவட்டம்' படத்தின் புதிய இசை அமைப்பாளர் விரைவில் அறிவிக்கப்படும, நன்றி யுவன்,” என ஆர்கே சுரேஷ் பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து இரு தரப்பிலும் பேசி சுமூக முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது.