விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகிறது | குழந்தையின் தாய் தற்கொலை : மனிதநேயம் இறந்து கொண்டிருப்பதாக நடிகை கல்யாணி ஆதங்கம் | 'ராமாயணா' - படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு ? | உங்கள் எதிர்பார்ப்பே என் எதிர்பார்ப்பு தனுஷூடன் அந்தோனி தாசன் | 5 மொழிகளில் ரீமேக் ஆகும் பார்கிங் திரைப்படம் | டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் கொட்டுக்காளி | மம்முட்டியின் பிரம்மயுகத்தை தனியாக பார்க்க மாட்டேன் : ஷோபிதா துலிபாலா | பவன் கல்யாண் படத்தில் தபுவுக்கு பதிலாக ஸ்ரேயா ரெட்டி | டர்போ படத்தின் கதையே கதாநாயகி மீது தான் நகரும் : மம்முட்டி உறுதி | பஹத் பாசிலின் ஆவேசத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய மும்பை போலீஸ் |
இது என்ன மாயம், சில சமயங்களில் உள்ளிட்ட படங்களில் துணை இயக்குனராக பணியாற்றிய பவானிஸ்ரீ, க.பெ.ரணசிங்கம் படத்தின் மூலம் நடிகை ஆனார். அதன் பிறகு 'பாவ கதைகள்' என்ற அந்தாலஜி படத்தில் நடித்தார். 'விடுதலை' படத்தில் தமிழரசி கேரக்டர் மூலம் புகழ்பெற்றார். தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதுதவிர 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தில் நடிக்கிறார்.
விடுதலை படத்தில் நடித்து நன்றாக பெயர் எடுத்து விட்டதால் வாய்ப்புகள் அடுத்தடுத்து வரும் என்று நினைத்தார். ஆனால் அவரை தேடி வந்த வாய்ப்புகள் அவருக்கு திருப்தி தரும் கதைகளாக அமையவில்லை. இதனால் நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறார். அதேசமயம் தனியாக போட்டோ ஷூட் நடத்தி அந்த படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தை ஆனந்த் இயக்குகிறார். ஆனந்த் ராம், மிர்சி விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.