ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

இது என்ன மாயம், சில சமயங்களில் உள்ளிட்ட படங்களில் துணை இயக்குனராக பணியாற்றிய பவானிஸ்ரீ, க.பெ.ரணசிங்கம் படத்தின் மூலம் நடிகை ஆனார். அதன் பிறகு 'பாவ கதைகள்' என்ற அந்தாலஜி படத்தில் நடித்தார். 'விடுதலை' படத்தில் தமிழரசி கேரக்டர் மூலம் புகழ்பெற்றார். தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதுதவிர 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தில் நடிக்கிறார்.
விடுதலை படத்தில் நடித்து நன்றாக பெயர் எடுத்து விட்டதால் வாய்ப்புகள் அடுத்தடுத்து வரும் என்று நினைத்தார். ஆனால் அவரை தேடி வந்த வாய்ப்புகள் அவருக்கு திருப்தி தரும் கதைகளாக அமையவில்லை. இதனால் நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறார். அதேசமயம் தனியாக போட்டோ ஷூட் நடத்தி அந்த படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தை ஆனந்த் இயக்குகிறார். ஆனந்த் ராம், மிர்சி விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.




