மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை வந்தாலே நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ் தோட்ட இல்லத்தின் முன்பு கூடும் ரசிகர்களை சந்திக்கும் வழக்கத்தை கொண்டுள்ளார். அந்தவகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று(ஜன., 15) ரசிகர்களை சந்தித்தார் ரஜினி. அவர்களுக்கு பொங்கல் வாழ்த்தும் தெரிவித்தார். அதோடு, வாழ்க்கையில் ஒழுக்கம் சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்றார்.
இந்நிலையில் ரஜினியின் பக்கத்து வீட்டு வயதான பெண்மணி ஒருவர் ரஜினி ரசிகர்களின் தொல்லை பற்றி பாதுகாவலர்கள் மற்றும் ரசிகர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ‛‛தலைவா தலைவா என ரசிகர்கள் கோஷம் போடுவார்கள். எங்களை மாதிரி இந்த தெருவில் உள்ள 21 வீட்டுக்காரங்க கஷ்டப்படுகிறார்கள். ஏன் உங்க(ரஜினி) வீட்டு கேட்டை திறந்து உள்ளே விட வேண்டியது தானே. தலைவரை பார்க்க வேண்டியது தானே. நீங்க கேட்டை மூடியே வைக்கிறீங்க. இவங்க எல்லோரும் எங்க வீட்டு முன்னாடி வந்து தான் இப்படி கத்தி கூச்சலிடுகிறார்கள். நாங்களும் வரி கட்டுறோம் ஆனால் எங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. போதாகுறைக்கு காலையில இப்படி பண்டிகை தினமும் அதுமா இப்படி தொந்தரவு செய்றாங்க. சாமி கூட கும்பிட முடியவில்லை'' என்றார்.