‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
சண்டை இயக்குனர்கள் சினிமாவில் ஹீரோ ஆவது ஒன்றும் புதிதில்லை. ஏற்கனவே கனல் கண்ணன், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் ஹீரோக்களாக ஆகி இருக்கிறார்கள் அந்த வரிசையில் அடுத்து வருகிறார் பீட்டர் ஹெய்ன். இந்திய சினிமாவின் முன்னணி சண்டை இயக்குனராக பணியாற்றி வரும் பீட்டர் ஹெய்ன் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு சண்டை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
பீட்டர் ஹெய்ன் நடிக்கும் படத்தை ரெண்ட்ஸ் சினிமாஸ் சார்பில் ஜெ.எம்.பஷீர் மற்றும் எம்.டி சினிமாஸ் சார்பில் ஏ.எம் சவுத்ரி தயாரிக்கிறார்கள். மா.வெற்றி என்ற புதுமுகம் இயக்குகிறார்.
இதுகுறித்து தயாரிப்பாளர் ஜே.எம்.பஷீர் கூறியதாவது: நானும் என் நண்பர் சவுத்ரியும் இணைந்து மாஸ்டர் பீட்டர் ஹெயினை வைத்து ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் படம் எடுக்க வேண்டும் எனப் பல காலமாகப் பேசி வந்தோம். இந்தியாவில் உருவான பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களில் மாஸ்டரின் பங்கு உள்ளது. உலகளவில் இந்திய சினிமாவை அறிய வைத்தவர், அவரை கவுரவிக்க வேண்டும் என ஆசைப்பட்டோம். இவரை வைத்து பெரிய அளவில் ஒரு படத்தைத் தயாரிக்கவுள்ளோம். படம் மிகப்பெரும் பொருட்செலவில் முன்னணி கலைஞர்களுடன் உருவாகவுள்ளது. எங்களுக்கு இயக்குனர் வெற்றியை ரொம்ப காலமாகத் தெரியும். அவர் மாஸ்டரை கவரும்படி ஒரு கதையைச் சொல்லியுள்ளார். சினிமாவில் உலகளவில் மொழிகள் தாண்டி ரசிக்கப்படுவது ஆக்ஷன் படம், காமெடிப்படம். அந்த வகையில் மாஸ்டரை வைத்து பெரிய ஆக்ஷன் படம் தயாரிக்கவிருக்கிறோம். உலகமே வியக்கும் சாதனைகள் செய்த மாஸ்டர் உடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. என்றார்.