‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த ‛ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் மலைவாழ் பழங்குடியின பெண்ணாக நடித்திருந்தவர் சஞ்சனா நடராஜன். கதைப்படி பின்னர் அவர் எஸ்.ஜே.சூர்யா மனைவி ஆவார். சஞ்சனா இதற்கு முன்பு 'சார்பட்டா பரம்பரை, ஜகமே தந்திரம்' ஆகிய படங்களில் நடித்தார். சஞ்சனா நடராஜன் தமிழ் மொழியில் மட்டுமல்ல வேறு மொழியிலும் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். தமிழ் பேசும் சென்னை வாழ் பெண்ணாக இருந்தாலும், தற்போது வேறு சில மொழிகளிலும் நடித்து வருகிறார் அவற்றில் வெளிவர உள்ள படங்கள் தமிழில் 'பாட்டில் ராதா'. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பிஜாய் நம்பியாரின் 'போர்' மற்றும் மலையாளப் படமான 'டிக்கி டக்கா' படங்களில் நடித்து வருகிறார்.