‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி | மோடி பயோபிக் படத்தில் நடிப்பது உண்மையா? - சத்யராஜ் தந்த விளக்கம் |
தமிழகத்தில் புதிய கலச்சாரமாக பல்வேறு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நடனம், பாடல் என கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஞ்சித் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி குறித்து கடுமையாக சாடியுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், 'சமீபத்தில் ஒரு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. பெண் குழந்தைகளை அரைகுறை ஆடையுடன் தெருவில் ஆடவிடுவது எல்லாம் மனவேதனையாக இருக்கிறது. என்னிடம் அதிகாரம் இருந்தால் அனைவருக்கும் ஆயுள் தண்டனை கொடுத்து விடுவேன். யார் மகனுடனோ யாரோ ஆடலாம்? யார் பெண்ணுடன் யாரோ ஆடலாம்?. இந்நிகழ்ச்சியால் தமிழ்நாடு எதிர்காலத்தில் ஒரு தாய்லாந்து போல மாறிவிடும்' என்று விமர்சித்துள்ளார். ரஞ்சித் பேசிய இந்த கருத்தானது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.