19ம் நூற்றாண்டு கதையில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா | சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஸ்வரன் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கியது | திருமுருகன் கொடுத்த சர்ப்ரைஸ் : பாண்டி கமல் நெகிழ்ச்சி | தலைமை செயலகத்தில் நுழைவதற்காக முற்றிலும் புதிதாக மாறிய ஸ்ரேயா ரெட்டி | மாரி 2 படத்துக்கு பின் தமிழில் நடிக்காதது ஏன் ? - டொவினோ தாமஸ் விளக்கம் | பிரபாஸ் ஒதுக்கிய வாய்ப்பால் கிடுகிடு வளர்ச்சி அடைந்த அல்லு அர்ஜுன் | 'ராமாயணா' படத்திற்கு புதிய சர்ச்சை | 2024ன் முதல் வசூல் படமாக 'அரண்மனை 4' | அஸ்வினியின் 'கங்கணம்' |
விலங்குகளிலேயே அதிக அறிவு கொண்டது குரங்கு. அது மனிதனை போன்றே சிந்திக்கவும், பேசவும் ஆரம்பித்தால் என்ன ஆகும் என்ற ஒரு கேள்வியில் உருவானது 'பிளானட் ஆப் தி ஏப்ஸ்' படங்கள். 1968ம் ஆண்டில் முதல் படம் உருவானது. அதன்பிறகு வெவ்வேறு டைட்டில்களில் 3 படங்கள் வந்தன. 2011ம் ஆண்டு மீண்டும் நவீன தொழில்நுட்பத்தில் உருவான படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன்பிறகு பல்வேறு தலைப்புகளில் இதுவரை 3 பாகங்கள் வெளிவந்துள்ளன. தற்போது இதன் 4வது பாகம் 'கிங்டம் ஆப் தி பிளானட் ஆப் தி ஏப்ஸ்' என்ற பெயரில் வெளிவருகிறது.
இந்த பாகத்தில் மனிதர்களிடம் தனது தனி ராஜ்யத்தை இழந்த ஏப்ஸ்கள். மனிதர்களுக்கு அடிமையாக வேலை செய்கிறது. மனிதர்களிடமிருந்து விடுதலை அடைந்து மீண்டும் தங்களது சாம்ராஜ்யத்தை (கிங்டம்) எப்படி நிறுவுகிறார்கள் என்பதுதான் கதை. தற்போது இதன் டிரைலர் ஆங்கிலம் மட்டுமல்லாது இந்தியாவில் ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. படத்தை வெஸ் பால் இயக்கியுள்ளார். ஓவன் டீக் , ப்ரேயா ஆலன், கெவின் டுராண்ட் , பீட்டர் மேகன் மற்றும் வில்லியம் ஹெச்.மேசி ஆகியோர் அனிமேஷன் கேரக்டர்களுக்கு உருவமும், குரலும் கொடுத்துள்ளனர்.
டுவன்டின்த் செஞ்சுரி ஸ்டுடியோஸ் இந்திய திரையரங்குகளில் படத்தை வெளியிடுகிறது. அடுத்த ஆண்டின் துவகத்தில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்தியாவில் ஆங்கிலம் தவிர்த்து ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியாகிறது. 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திலும் வெளியாகிறது.