எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் | உங்களை ஏமாற்ற மாட்டேன் லாலேட்டா : மோகன்லால் மகளை அறிமுகப்படுத்தும் இயக்குனர் உறுதி | சினிமாவில் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை: கிரேஸ் ஆண்டனி | சுரேஷ் கோபி பட சென்சார் விவகாரம் : சனிக்கிழமை படம் பார்க்கும் நீதிபதி | கவுதம் ராம் கார்த்திக் படத்தில் இணையும் பிரபலங்கள் | மீண்டும் ஒரு லெஸ்பியன் படம் | வரி உயர்வு : ஆகஸ்ட் முதல் படங்களை வெளியிடப் போவதில்லை : புதுச்சேரி விநியோகஸ்தர்கள் அறிவிப்பு | இங்கே ஹோம்லி, அங்கே கவர்ச்சி : ராஷ்மிகாவின் அடடே பாலிசி | பிளாஷ்பேக்: வசுந்தரா தாசை நிராகரித்த மணிரத்னம் |
தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் தில்ராஜு. இவர்தான் கடந்தாண்டு விஜய் நடித்த வாரிசு படத்தை தயாரித்தார். படங்கள் தயாரிப்பது மட்டுமின்றி பல படங்களை வாங்கி விநியோகம் செய்வதிலும் தில் ராஜூ தீவிரம் காட்டி வருகிறார். அதனால் அவரது கட்டுப்பாட்டில் ஆந்திராவில் நிறைய தியேட்டர்கள் உள்ளன.
இந்த நிலையில் தற்போது ஆந்திராவில் விஜய்யின் லியோ வெளியாவதற்கு தில்ராஜ் முட்டுக்கட்டை போட்டு வருவதாக கூறுகிறார்கள். இதற்கு காரணம், விஜய் நடிப்பில் தில் ராஜு தயாரித்த வாரிசு படத்தை தமிழகத்தில், தற்போது லியோ படத்தை தயாரித்துள்ள லலித்குமாரின் 7 ஸ்கிரீன் நிறுவனம்தான் வெளியிட்டது. அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்சனையால் மோதல் ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாகவே தற்போது லலித் குமார் தயாரித்துள்ள லியோ படத்தை தெலுங்கில் வெளியிடுவதற்கு எதிராக தில்ராஜு போர்க்கொடி பிடித்திருப்பதாக கூறுகிறார்கள். அதோடு தனது வசமுள்ள மல்டி பிளக்ஸ் தியேட்டர்களை கொடுக்க அவர் மறுப்பதாகவும் தெரிகிறது.
இன்னும் லியோ படம் திரைக்கு வருவதற்கு ஒரு வார காலமே உள்ள நிலையில், இந்த விவகாரத்தினால் ஆந்திராவில் லியோ படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தற்போது தில்ராஜுவை சந்தித்து 7 ஸ்கிரீன் நிறுவனம் தயாரிப்பாளர் லலித் குமார் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.