பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? | 'தி ராஜா சாப்' படத்தில் 'டூப்' பயன்படுத்தினேனா?: மாளவிகா மோகனன் விளக்கம் | 'கருப்பு' ரிலீஸ் - அப்டேட் கொடுத்த இயக்குனர் ஆர்ஜே பாலாஜி | 'தாய் கிழவி' ரிலீஸ் ஒத்தி வைப்பு ஏன் ? | பிளாஷ்பேக்: முரணான தலைப்பு, முத்தான வெற்றி, முயற்சித்து சாதித்த இயக்குநர் கே பாக்யராஜ் | 'சூர்யா- 46' படத்தின் டைட்டில், ரிலீஸ் குறித்த தகவல் வெளியானது! |

தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் தில்ராஜு. இவர்தான் கடந்தாண்டு விஜய் நடித்த வாரிசு படத்தை தயாரித்தார். படங்கள் தயாரிப்பது மட்டுமின்றி பல படங்களை வாங்கி விநியோகம் செய்வதிலும் தில் ராஜூ தீவிரம் காட்டி வருகிறார். அதனால் அவரது கட்டுப்பாட்டில் ஆந்திராவில் நிறைய தியேட்டர்கள் உள்ளன.
இந்த நிலையில் தற்போது ஆந்திராவில் விஜய்யின் லியோ வெளியாவதற்கு தில்ராஜ் முட்டுக்கட்டை போட்டு வருவதாக கூறுகிறார்கள். இதற்கு காரணம், விஜய் நடிப்பில் தில் ராஜு தயாரித்த வாரிசு படத்தை தமிழகத்தில், தற்போது லியோ படத்தை தயாரித்துள்ள லலித்குமாரின் 7 ஸ்கிரீன் நிறுவனம்தான் வெளியிட்டது. அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்சனையால் மோதல் ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாகவே தற்போது லலித் குமார் தயாரித்துள்ள லியோ படத்தை தெலுங்கில் வெளியிடுவதற்கு எதிராக தில்ராஜு போர்க்கொடி பிடித்திருப்பதாக கூறுகிறார்கள். அதோடு தனது வசமுள்ள மல்டி பிளக்ஸ் தியேட்டர்களை கொடுக்க அவர் மறுப்பதாகவும் தெரிகிறது.
இன்னும் லியோ படம் திரைக்கு வருவதற்கு ஒரு வார காலமே உள்ள நிலையில், இந்த விவகாரத்தினால் ஆந்திராவில் லியோ படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தற்போது தில்ராஜுவை சந்தித்து 7 ஸ்கிரீன் நிறுவனம் தயாரிப்பாளர் லலித் குமார் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.