இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கென்று தனி வாட்ஸ் அப் குரூப் உள்ளது. அதேபோல சில தயாரிப்பாளர்கள் தனியாக வாட்ஸ் அப் குரூப் தொடங்கி நடத்தி வருகிறார்கள். இந்த குரூப்புகளில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் பற்றியும், சங்கத்தின் செயல்பாடுகள் பற்றியும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். உறுப்பினர்கள் மற்ற உறுப்பினர்கள் குறித்து தனிப்பட்ட முறையிலும் விமர்சித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சங்கத்தின் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, சங்கத்தின் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், நிரந்தர உறுப்பினர்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் ஆதாரமின்றி அவதூறு பரப்புகிறவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற அவதூறு கருத்துக்களை வாட்ஸ் அப் அட்மின்கள் உடனடியாக நீக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவதூறு பரப்பும் உறுப்பினர்களோடு மற்ற உறுப்பினர்கள் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்”.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.