அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் | படப்பிடிப்பை முடித்த விஷ்ணு விஷால், ராம்குமார் | வினோத் தயாரிப்பில் பிக்பாஸ் ராஜூ? | வெற்றியைப் பதிவு செய்வாரா 'படை தலைவன்' ? | பிளாஷ்பேக்: “எதிர் நீச்சல்” செய்து வென்று காட்டிய இயக்குநர் கே பாலசந்தர் | படத்தை பார்க்காமலேயே மறைந்த ஷிஹான் ஹுசைனி | '3BHK' படத்தில் நடித்தபோதுதான் சொந்த வீடு வாங்கினேன்: சித்தார்த் | உதவி இயக்குனர்களுக்கு நன்றி சொன்ன நிமிஷா சஜயன் | தணிக்கை சான்றிதழ்களில் திருத்தம்: வாரியம் முடிவு | சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனத்தை நீக்கினால் 'மனுஷி' க்கு சான்றிதழ்: நீதிமன்றத்தில் தணிக்கை குழு தகவல் |
நடிகை காஜல் பசுபதி சின்னத்திரையில் வில்லியாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இனியா என்ற தொடரில் ஆல்யா மானசா ஹீரோயினாக நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடரில் தற்போது ஆல்யாவுக்கு வில்லியாக காஜல் பசுபதி என்ட்ரி கொடுத்துள்ளார். கடைசியாக ராதிகா சரத்குமாரின் அரசி தொடரில் நடித்திருந்த காஜல் பசுபதி 14 ஆண்டுகளுக்கு பின் சீரியலில் வில்லியாக கம்பேக் கொடுத்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காஜல் பசுபதி ஆல்யாவுக்கு எதிராக வில்லத்தனம் செய்யும் எபிசோடுகள் அண்மையில் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளன. திறமையான நடிகையான காஜல் பசுபதிக்கு இந்த ரீ-என்ட்ரி தொடர்ந்து சீரியல் வாய்ப்புகளை பெற்றுத்தருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.