'சலார்' டிரைலர் - மற்றுமொரு 'கேஜிஎப்' சாயல் படமா ? | அடுத்தடுத்த படங்களுக்கும் தொடர்ந்து இடையூறு செய்தார் ஞானவேல் ராஜா : அமீர் வெளியிட்ட புதிய தகவல் | பெங்களூர் டேஸ் பைக் ரேஸ் காட்சி : அஞ்சலி மேனன் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல் | பிரித்விராஜின் ஆடு ஜீவிதம் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | நயன்தாரா, தமன்னாவை ஓவர்டேக் செய்த வாமிகா கபி | மழை காரணமாக 'டல்' முன்பதிவுகள் | அஜித் - வெற்றிமாறன் கூட்டணி? | 18 மொழிகளில் வெளியாகும் ஜெயம் ரவி படம் | ரூ.60 கோடியில் உருவாகும் விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் படம் | அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அப்டேட் இதோ |
பிரபு சாலமன் இயக்கத்தில் அமலா பால் நடித்த 'மைனா' படத்தை தயாரித்தவர் ஜான் ஜின்னி மேக்ஸ். அதன் பிறகு சாட்டை, சவுகார்பேட்டை, பொட்டு படங்களை தயாரித்தார். தற்போது நில மோசடி வழக்கில் ஜான் மேக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
2018ம் ஆண்டு திருவள்ளூரை அடுத்த மணவாளநகரைச் சேர்ந்த மோகனவேல் என்பவருக்கு வேப்பம்பட்டு ரேவதி நகரில் உள்ள 1,905 சதுர அடி கொண்ட காலி மனையை 9 லட்சத்துக்கு விற்றார். பின்னர் சில நாட்களுக்கு பிறகு மோகனவேலிடம் சென்று, அந்த நிலத்தில் வில்லங்கம் இருப்பதாக பொய் சொல்லி அவரிடம் இருந்து அசல் பத்திரத்தை வாங்கினார். பின்னர் மோகனவேலுக்கு தெரியாமல் அதே இடத்தை ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த சுரேஷ் கிருஷ்ணன் என்பவருக்கு விற்றுள்ளார்.
இதனால் மோகனவேல் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதை தொடர்ந்து ஜான் ஜின்னி மேக்ஸ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.