பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து மீண்டும் ஹரி இயக்கத்தில் விஷால் தனது 34வது படத்தில் நடிக்கவுள்ளார். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இரு நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தை அறிவித்தனர். இந்த நிலையில் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே ஹரி இயக்கத்தில் சிங்கம் 1, 2 , வேங்கை ஆகிய படங்களுக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அதேப்போன்று விஷாலின் தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களை ஹரி இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் உள்ளன. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற இடங்களில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.