சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இந்தியன் 2 உள்பட சில படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இந்நிலையில் கைவசம் உள்ள படங்களில் நடித்த முடித்த பிறகு நடிப்புக்கு சில காலம் காஜல் அகர்வால் முழுக்குப்போட போவதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது. ஆனால் அதை உடனடியாக மறுத்த காஜல் அகர்வால், தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இவர் அளித்த ஒரு பேட்டியில் தான் ஒரு சிவபெருமானின் தீவிரமான பக்தை என்று கூறியிருக்கிறார். அதன் காரணமாகவே என் மகனுக்கு சிவபெருமானின் பெயரை சூட்டினேன். அதாவது சிவபெருமானின் மற்றொரு பெயர் நீலகண்டன். அதில் உள்ள முதல் இரண்டு எழுத்துக்களை தேர்வு செய்து, நீல் என்று என் மகனுக்கு பெயர் சூட்டினேன் என்று தனது மகனின் பெயருக்குள் மறைந்திருக்கும் நீலகண்டனை வெளிச்சம் போட்டுள்ளார் காஜல் அகர்வால்.