2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் | மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' |

அரசியலுக்கு வரும் ஆசையில் காய்நகர்த்தி வரும் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சில தினங்களுக்கு முன்பு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழைகளுக்கு உணவு வழங்கினார். இது வெற்றகரமாக நடந்தது. திட்டமிடப்பட்ட இடங்களை விட அதிகமான இடங்களில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இதன் அடுத்தகட்டமாக 10, 12ம் வகுப்பு அரசு தேர்வில் அதிக மதிப்பெண்கள் படைத்து சாதனை படைத்த மாணவர்களை நாளை (17ம் தேதி) விஜய் சந்திக்கிறார். தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை வழங்க உள்ளார். சுமார் 1400 மாணவர்கள் இந்த ஊக்கத் தொகையை பெறுகிறார்கள்.
சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை விருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 கோடி செலவில் நலத்திட்ட உதவிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் போது பொதுவெளியில் பேனர், கட் அவுட் வைக்கக் கூடாது என மன்ற நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களை அழைத்து வரும் தொகுதி நிர்வாகிகள் தவிர வேறு யாரும் நிகழ்ச்சிக்கு வரக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அடையாள அட்டைகள் ஏற்கெனவே தொகுதி நிர்வாகிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.