நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தமிழ்நாட்டை சேர்ந்த ஆதர்ஷ் மகிகாந்தம் என்பவர் ஆஸ்திரேலியா நாட்டின் தலைநகர் சிட்னியில் ரயில் இன்ஜின் டிரைவராக(லோகோ பைலட்) இருக்கிறார். சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் அவர் தயாரித்து, நடித்துள்ள படம் 'நாயாடி'. கேரளாவில் உள்ள மலைகளில் வாழும் ஆதிகுடி மக்கள் நாயாடிகள். இவர்களின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டு இந்த படத்தை உருவாக்கி உள்ளார். இதில் அவருடன் துணிவு படத்தில் நடித்த காதம்பரி, யூடியூபர் பேபி, மாளவிகா மனோஜ், அரவிந்த்சாமி, நிவாஸ் சரவணன், ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளர். மோசஸ் டேனியல் ஒளிப்பதிவு செய்துள்ளார். அருண் இசை அமைத்துள்ளார். படம் வருகிற 16ம் தேதி வெளிவருகிறது.
படம் பற்றி ஆதர்ஷ் மதிகாந்தம் கூறியதாவது: திரைப்படத் துறையில் பங்காற்ற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. எனவே, ஆஸ்திரேலியாவில் நான் ஈட்டிய பணத்தைக் கொண்டு 'நாயாடி' திரைப்படத்தை உருவாக்கியுள்ளேன். திகில் திரைப்படங்களுக்கு என உள்ள வடிவத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டு இருக்கும். அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனத்தவரான நாயாடிகள் குறித்தும் அவர்கள் வரலாறு குறித்தும் இப்படம் பேசும்.
பல்லாண்டுகளாக துயரங்களை அனுபவித்து வரும் நாயாடிகள், கடந்த காலத்தில் மனிதர்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பில்லி சூனியம் மற்றும் வூடு எனப்படும் மாந்திரீகங்களை கற்று அதை எவ்வாறு பயன்படுத்தினர் என்பதையும், அவர்களின் இக்கால தொடர்பு குறித்தும் இத்திரைப்படம் விவரிக்கும். என்றார்.