மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில், முதன்மை கதாபாத்திரமான மீனாட்சி கதாபாத்திரத்தில் நடிகை அர்ச்சனா நடித்து வந்தார். சில தினங்களுக்கு முன் கதையின் போக்கு தனக்கு பிடிக்காத காரணத்தால் மீனாட்சி பொண்ணுங்க சீரியலிலிருந்து தான் விலகிக்கொள்வதாக அறிவித்தார். இதனையடுத்து யார் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. ஆனால், மீனாட்சி தீ விபத்தில் இறந்துவிட்டது போல அவரது அஸ்தியை காண்பித்து அந்த கதாபாத்திரத்தை எண்ட் கார்டு போட்டு முடித்திருந்தனர். இதனால் மீனாட்சி கதாபாத்திரத்திற்கே எண்ட் கார்டா? என ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர்.
இந்நிலையில், அர்ச்சனாவுக்கு மாற்றாக மற்றொரு நடிகையை கண்டுபிடித்துவிட்ட சீரியல் குழு மீனாட்சி கதாபாத்திரத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளது. இனி வரும் எபிசோடுகளில் நடிகை ஸ்ரீ ரஞ்சனி தான் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான ப்ரோமோ அண்மையில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் புதிய மீனாட்சியை ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர்.