இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மலையாள நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி தமிழில் ஆக்ஷன் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து கார்கி, கேப்டன் படங்களில் நடித்தவருக்கு கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் 1, 2 படங்கள் புகழ் வெளிச்சம் தந்தது. தற்போது மூன்று மொழிகளில் அவர் நடித்து வருகிறார். ஐஸ்வர்ய லட்சுமி ஒரு பேட்டியில் கூறுகையில், ‛‛நான் ஒரு டாக்டர். எம்பிபிஎஸ் படித்துள்ளேன். ஆனால் சினிமாவில் உள்ளேன். இது கடவுளின் விருப்பம் என நினைக்கிறேன். ஏனென்றால் நான் சினிமாவிற்கு வருவேன், நடிகையாவேன் என ஒரு போதும் நினைத்துகூட பார்க்கவில்லை. படித்து முடித்ததும் ஒரு வேலைக்கு செல்வதே சமூக அந்தஸ்து, சினிமா அப்படிப்பட்டது அல்ல என எனது குடும்பத்தினர் எண்ணினர். காரணம் சினிமா பற்றி அவர்கள் கேள்விப்பட்ட விஷயம் அவர்களுக்கு அப்படி எண்ண தோன்றியது. இருப்பினும் அதையெல்லாம் கடந்து சினிமாவிற்கு வந்தேன். சினிமாவில் நிறைய எதிர்ப்புகளை சந்தித்தேன். சினிமாவிற்கு வருவது எளிதானது அல்ல. ஒவ்வொரு நாளும் போராட்டமே'' என்றார்.