ஏவிஎம் சரவணன் படத்தயாரிப்பை நிறுத்தியது ஏன்? | கை கட்டியபடி பேசுவார், வெள்ளை உடைகளை விரும்பி அணிவார்: பணிவுக்கும் உபசரிப்புக்கும் புகழ் பெற்ற ஏவி.எம்.சரவணன் | பிரபலங்கள் பட்டியல் 2025: தமிழ் நடிகர்கள், நடிகைகளுக்கு இடமில்லை… | சாய் பல்லவியால் மறுவாழ்வு பெற்றேன் ; இசையமைப்பாளர் நெகிழ்ச்சி | திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார் | சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி |

தெலுங்கு நடிகர் நிகில் நடிக்கும் 20வது படத்திற்கு 'சுயம்பு' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பரத் கிருஷ்ணாமாச்சாரி இயக்குகிறார். பிக்சல் ஸ்டுடியோ சார்பில் கீழ்புவன் மற்றும் ஸ்ரீகர் ஆகியோர் தயாரிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ரவி பஸ்ருர் இசையமைக்கிறார். நிகிலின் பிறந்த நாளையொட்டி நேற்று படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டது.
இது தொடர்பாக தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 'சுயம்பு' என்றால் 'தானாக பிறந்ததுஅல்லது தன் சொந்த விருப்பத்தால் உருவாக்கப்பட்டது என அர்த்தம். இது ஒரு மில்லினியத்திற்கு முந்தைய கதை. இது ஒரு தனி மனிதனின் காவியமாக, ஒரு பேரரசின் பொற்காலத் தொடக்கமாக உருவாகிறது. நிகில் 'தி லெஜண்டரி வாரியர்' என்று இதில் அறிமுகப்படுத்தப்படுகிறார். புகழ்பெற்ற போர் வீரரின் காவிய படைப்பு மகத்தானதாக வெளிவர இருக்கிறது. வருகிற ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. நிகிலின் சினிமா பயணத்தில் அதிக பொருட்செலவில் உருவாகும் படம் 'சுயம்பு'. இது சிறந்த தொழில்நுட்ப தரத்துடன் உருவாக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.