ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் |
தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர்,'புஷ்பா' படத்தில் நடித்த ராஷ்மிகாவைப் பற்றி விமர்சித்துப் பேசியதாக செய்திகள் வெளிவந்தன. அது குறித்து ஐஸ்வர்யா தரப்பிலிருந்து விளக்க அறிக்கை ஒன்று வெளியானது. தான் பேசியதை தவறாகப் புரிந்து கொண்டு செய்தியாக வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்திவிட்டார்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
அதைப் பற்றித் தெரிந்து கொண்டு ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஆறுதல் தரும் விதத்தில் டுவீட் செய்துள்ளார் ராஷ்மிகா. அதில், “ஹாய் அன்பே, இப்போதுதான் இது பற்றி பார்த்தேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை நான் நன்றாகப் புரிந்து கொண்டேன். இது பற்றி நமக்குள் எந்த விளக்கமும் தேவையில்லை என நான் நினைக்கிறேன். உங்கள் மீது எனக்கு அன்பும் மரியாதையும் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் 'பர்ஹானா' படத்திற்கு எனது சிறப்பான, அன்பான வாழ்த்துகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார். ராஷ்மிகாவின் பதிவை ரிடுவீட் செய்து ஹாட்டின் எமோஜிகளைப் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா.