பெண் தயாரிப்பாளர் புகார் : உன்னி கிருஷ்ணன் மீது வழக்கு | அருண் விஜய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகப்பெரிய ஹீரோவின் கோரிக்கையை நிராகரித்த மகிழ்திருமேனி | மகள் பவதாரிணி மறைந்து ஓராண்டு : இளையராஜா உருக்கம் | ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி | 'ரெட்ட தல' டப்பிங்கை முடித்த அருண் விஜய் | 'விடாமுயற்சி' படத்தால் ரிலீஸ் இடைவெளி | எங்கள் ஆவணங்கள் சரியானவையே - தயாரிப்பாளர் தில் ராஜு | கல்யாணம் குறித்து கேள்வி : ஸ்ருதிஹாசன் டென்ஷன் | தர்ஷனுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் உத்தரவு | பிளாஷ்பேக் : ஏவிஎம் படத்தில் நடிக்க மறுத்த ரஜினி |
தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர்,'புஷ்பா' படத்தில் நடித்த ராஷ்மிகாவைப் பற்றி விமர்சித்துப் பேசியதாக செய்திகள் வெளிவந்தன. அது குறித்து ஐஸ்வர்யா தரப்பிலிருந்து விளக்க அறிக்கை ஒன்று வெளியானது. தான் பேசியதை தவறாகப் புரிந்து கொண்டு செய்தியாக வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்திவிட்டார்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
அதைப் பற்றித் தெரிந்து கொண்டு ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஆறுதல் தரும் விதத்தில் டுவீட் செய்துள்ளார் ராஷ்மிகா. அதில், “ஹாய் அன்பே, இப்போதுதான் இது பற்றி பார்த்தேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை நான் நன்றாகப் புரிந்து கொண்டேன். இது பற்றி நமக்குள் எந்த விளக்கமும் தேவையில்லை என நான் நினைக்கிறேன். உங்கள் மீது எனக்கு அன்பும் மரியாதையும் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் 'பர்ஹானா' படத்திற்கு எனது சிறப்பான, அன்பான வாழ்த்துகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார். ராஷ்மிகாவின் பதிவை ரிடுவீட் செய்து ஹாட்டின் எமோஜிகளைப் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா.