மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

ரோஜா தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ப்ரியங்கா நல்காரி. இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. ரோஜா தொடர் நிறைவடைந்த பின் ஜீ தமிழின் 'சீதா ராமன்' தொடரில் ஹீரோயினாக நடித்து வந்தார். இதற்கிடையில், ராகுல் என்பவரை காதலித்து வந்த ரியங்கா, கடந்த மாதம் மலேசியாவுக்கு சென்று திடீரென திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு சீரியல் ஷூட்டிங்கிற்கு கூட மலேசியாவில் இருந்து தான் வந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், அவர் சீரியலிலிருந்து விலகியுள்ளார். இதுகுறித்து ப்ரியங்கா கூறிய போது, 'சீதா ராமன் தொடர் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும், கணவர் சொல்கிற போது அதை தட்ட முடியவில்லை. அதனால் சீரியலை விட்டு விலகுகிறேன்' என்று கூறியிருக்கிறார்.