22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
கோடை விடுமுறை சுட்டெரிக்கும் வெயிலுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. அடிக்கும் வெயிலில் மக்களும் தியேட்டர்கள் பக்கம் போக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த மாதக் கடைசியில் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' படத்திற்குக் கூட எதிர்பார்த்த அளவிற்கும் பெரிய வரவேற்பில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த மே மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையான வரும் 19ம் தேதி தற்போது வரை மூன்று படங்களுக்கான வெளியீட்டு அறிவிப்புகளே வெளிவந்துள்ளது. விஜய் சேதுபதி நடிக்கும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', விஜய் ஆண்டனி இயக்கியும் நடிக்கும் 'பிச்சைக்காரன் 2', ஆகிய படங்கள் தியேட்டர்களிலும், வரலட்சுமி, ஆரவ் நடித்துள்ள 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' படம் ஓடிடி தளத்திலும் வெளியாக உள்ளது.
விஜய் சேதுபதி நடித்துள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படம் எப்போதே வர வேண்டியது. சில பல சிக்கல்களுக்குப் பிறகு இப்போதுதான் வெளியாக உள்ளது. இந்த வருடம் ஓடிடி தளங்களில் இதுவரையிலும் எந்த ஒரு படமும் நேரடியாக வெளியாகவில்லை. முதல் படமாக 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' படம் இருக்கிறது.
மே 19 போட்டியில் வேறு சில படங்கள் சேருமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியும்.