20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தன் வீட்டில் இருந்த நகைகளை காணவில்லை என்று புகார் செய்தார். இதை தொடர்ந்து வீட்டில் வேலை பார்த்த ஈஸ்வரி என்ற பெண்ணை கைது செய்த போலீசார், அவரிடம் நகைகளை மீட்டனர் வழக்கு, விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா, தனது சொகுசு காரின் சாவியை காணவில்லை என்று தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகார் மனுவில், ஏப்ரல் 23ம் தேதி கோபாலபுரத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த பொழுது தனது காரின் மற்றொரு சாவி காணாமல் போனதாக தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கு பதிந்து போலீசார் கூறியதாவது : சொகுசு காருக்கு போலியான சாவி செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட நிறுவனம் மூலம் மட்டும் மாற்று சாவியை பெற முடியும். அதற்கும் போலீசாரின் எப்.ஐ.ஆர். நகலை கார் நிறுவனத்திடம் சமர்ப்பித்தால் மட்டுமே சாவி கிடைக்கும். எனினும் சவுந்தர்யாவின் கார் சாவி தொலைந்ததா அல்லது திருடப்பட்டதா என விசாரிக்கிறோம் என்றனர்.