'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தன் வீட்டில் இருந்த நகைகளை காணவில்லை என்று புகார் செய்தார். இதை தொடர்ந்து வீட்டில் வேலை பார்த்த ஈஸ்வரி என்ற பெண்ணை கைது செய்த போலீசார், அவரிடம் நகைகளை மீட்டனர் வழக்கு, விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா, தனது சொகுசு காரின் சாவியை காணவில்லை என்று தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகார் மனுவில், ஏப்ரல் 23ம் தேதி கோபாலபுரத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த பொழுது தனது காரின் மற்றொரு சாவி காணாமல் போனதாக தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கு பதிந்து போலீசார் கூறியதாவது : சொகுசு காருக்கு போலியான சாவி செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட நிறுவனம் மூலம் மட்டும் மாற்று சாவியை பெற முடியும். அதற்கும் போலீசாரின் எப்.ஐ.ஆர். நகலை கார் நிறுவனத்திடம் சமர்ப்பித்தால் மட்டுமே சாவி கிடைக்கும். எனினும் சவுந்தர்யாவின் கார் சாவி தொலைந்ததா அல்லது திருடப்பட்டதா என விசாரிக்கிறோம் என்றனர்.




