ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் | சிவராஜ்குமார் படம் மூலமாக கன்னடத்தில் நுழைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | 4 வயது குறைந்த நடிகருக்கு ஜோடியாக நடித்த கவுரி கிஷன் | பிளாஷ்பேக் : புறக்கணித்த கதையை ஹிந்தியில் ரீமேக் செய்த ஏவிஎம் | காதலியை திருமணம் செய்தார் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு 'பைசன்' படக்குழு 10 லட்சம் நிதி | மஹாகாளியாக மாறும் பூமி ஷெட்டி | விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை |

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஸ்டூடண்ட் நம்பர் 1 படத்தில் தொடங்கி கடைசியாக வெளிவந்த ஆர்.ஆர்.ஆர் படம் வரைக்கும் தொடர் வெற்றிகளை மட்டும் குவித்து வந்துள்ளார். தற்போது நடிகர் மகேஷ் பாபுவின் 29வது படத்தை இயக்கவுள்ளார். அதற்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ராஜமவுலி. 
இந்நிலையில் அவரது கனவு படமான மகாபாரதம் பற்றி பல இடங்களில் பகிர்ந்துள்ளார். அதேபோல் சமீபத்தில் ஒரு நேர்காணலில் அளித்த பேட்டியில் மகாபாரதம் பற்றி கூறியுள்ளார். அதன்படி, "நான் மகாபாரதத்தை படமாக்க ஒரு சில வருடங்களோ அல்லது அதற்கும் மேல் கூட ஆகலாம், ஏனெனில் மகாபாரதம் பற்றி உள்ள அனைத்து விதமான புத்தகங்களை நான் தேடி படிக்கிறேன். ஆனால், இப்போது மகாபாரதம் பற்றி என்னிடம் நீங்கள் கேட்டால் என்னால் உறுதியாக ஒரு விஷயம் சொல்ல முடியும், மகாபாரதத்தை குறைந்தது 10 பாகங்கள் கொண்ட படங்களாக தான் உருவாக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            