பொங்கல் போட்டியில் 2 படங்கள் மட்டுமா? | தாஷமக்கான் தலைப்புக்கு என்ன அர்த்தம் | பிளாஷ்பேக்: வரதட்சணை கொடுமைக்கு எதிரான முதல் படம் | ‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! |

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஸ்டூடண்ட் நம்பர் 1 படத்தில் தொடங்கி கடைசியாக வெளிவந்த ஆர்.ஆர்.ஆர் படம் வரைக்கும் தொடர் வெற்றிகளை மட்டும் குவித்து வந்துள்ளார். தற்போது நடிகர் மகேஷ் பாபுவின் 29வது படத்தை இயக்கவுள்ளார். அதற்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ராஜமவுலி.
இந்நிலையில் அவரது கனவு படமான மகாபாரதம் பற்றி பல இடங்களில் பகிர்ந்துள்ளார். அதேபோல் சமீபத்தில் ஒரு நேர்காணலில் அளித்த பேட்டியில் மகாபாரதம் பற்றி கூறியுள்ளார். அதன்படி, "நான் மகாபாரதத்தை படமாக்க ஒரு சில வருடங்களோ அல்லது அதற்கும் மேல் கூட ஆகலாம், ஏனெனில் மகாபாரதம் பற்றி உள்ள அனைத்து விதமான புத்தகங்களை நான் தேடி படிக்கிறேன். ஆனால், இப்போது மகாபாரதம் பற்றி என்னிடம் நீங்கள் கேட்டால் என்னால் உறுதியாக ஒரு விஷயம் சொல்ல முடியும், மகாபாரதத்தை குறைந்தது 10 பாகங்கள் கொண்ட படங்களாக தான் உருவாக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.




