25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ருத்ரன். இந்த படத்திற்காக லாரன்ஸ் மற்றும் படக்குழுவினர்கள் கோவை, மதுரை போன்ற ஊர்களில் தியேட்டர் விசிட் செய்து வருகின்றனர். கோவையில் நேற்று ரசிகர்களை சந்தித்தனர். அப்போது அவர் பேசியது , " ருத்ரன் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த படத்தின் மூலம் மூன்று வருடங்கள் கழித்து ரசிகர்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கொரோனாவிற்கு பிறகு மக்களின் மனநிலை தற்போது மாறிவிட்டது. சிறிய படங்களுக்கு மக்கள் அதிக அளவில் ஆதரவு கொடுத்து வருகின்றனர். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு காஞ்சனா படத்தின் அடுத்த பாகத்தை மீண்டும் எடுக்கலாம் என்று நினைக்கிறேன்" என லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.