'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
நடிகர் அஜித் குமார் தனது 62வது படத்திற்காக தயாராகி வருகிறார். அவரின் நீண்ட நாள் கனவான பைக்கில் உலகமெங்கும் செல்ல பயிற்சியிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே இந்தியாவில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டார்.
இந்நிலையில் கிலாஸ்கோவில் இ ருந்து சென்னைக்கு 10 மாத கைக்குழந்தையுடன் தனியாக ஒரு பெண் பயணம் செய்துள்ளார். அந்த பெண்ணிற்கு அஜித் செய்த உதவி குறித்து அந்த பெண்ணின் கணவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். விமான நிலையத்தில் குழந்தையுடன் பொருட்களையும் தூக்கி வந்துள்ள அந்த பெண்ணிடம் எனக்கும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த உணர்வு எனக்கும் புரியும் எனக்கூறி அவரே அந்த பொருட்களை தூக்கி உதவியுள்ளார். இது குறித்து அந்த பெண்ணின் கணவர் இன்ஸ்டாகிராமில் அஜித் குமாருடன் தன் மனைவி எடுத்த புகைப்படத்தோடு அஜித் குமாருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். இப்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.