பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
2023ம் ஆண்டிற்கான பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்ப கட்டத்திலேயே விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் மீண்டும் போட்டிகள் நடந்து வருகின்றன. தனது சொந்த மைதானத்தில் கடந்த வாரம் இந்த ஆண்டிற்கான முதல் போட்டியை சென்னை அணி விளையாடியது. அப்போது தனுஷ், சிவகார்த்திகேயன், வரலட்சுமி உள்ளிட்ட பல தமிழ் நடிகர்கள், நடிகைகள் போட்டியைக் கண்டுகளித்தனர்.
நேற்று ராஜஸ்தான் அணியுடனான போட்டியை தனது சொந்த மைதானத்தில் சென்னை அணி விளையாடி தோல்வியுற்றது. நேற்றைய போட்டியையும் பல நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டு பார்த்தனர். விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் அவர் தொகுதியைச் சேர்ந்த சிறுவர்களுடன் போட்டியைக் கண்டு ரசித்தார்.
நடிகை த்ரிஷா, பிந்து மாதவி, ஐஸ்வர்யா ராஜேஷ், மேகா ஆகாஷ், சதீஷ், ஹரிஷ் கல்யாண் நேற்றைய போட்டியைப் பார்த்தார்கள். ஐஸ்வர்யா அவரது 'சொப்பன சுந்தரி' குழுவினருடன் வந்திருந்தார்.
மலையாள நடிகர்களான ஜெயராம், பிஜு மேனன் ராஜஸ்தான் அணிக்கு ஆதரவு தெரிவித்து நேற்றைய போட்டியை ரசித்தார்கள். கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் தான் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருக்கிறார். கேரளாவுக்காக ஐபிஎல் அணி எதுவும் இல்லாதது குறிப்பிட வேண்டிய ஒன்று.