அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
2023ம் ஆண்டிற்கான பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்ப கட்டத்திலேயே விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் மீண்டும் போட்டிகள் நடந்து வருகின்றன. தனது சொந்த மைதானத்தில் கடந்த வாரம் இந்த ஆண்டிற்கான முதல் போட்டியை சென்னை அணி விளையாடியது. அப்போது தனுஷ், சிவகார்த்திகேயன், வரலட்சுமி உள்ளிட்ட பல தமிழ் நடிகர்கள், நடிகைகள் போட்டியைக் கண்டுகளித்தனர்.
நேற்று ராஜஸ்தான் அணியுடனான போட்டியை தனது சொந்த மைதானத்தில் சென்னை அணி விளையாடி தோல்வியுற்றது. நேற்றைய போட்டியையும் பல நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டு பார்த்தனர். விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் அவர் தொகுதியைச் சேர்ந்த சிறுவர்களுடன் போட்டியைக் கண்டு ரசித்தார்.
நடிகை த்ரிஷா, பிந்து மாதவி, ஐஸ்வர்யா ராஜேஷ், மேகா ஆகாஷ், சதீஷ், ஹரிஷ் கல்யாண் நேற்றைய போட்டியைப் பார்த்தார்கள். ஐஸ்வர்யா அவரது 'சொப்பன சுந்தரி' குழுவினருடன் வந்திருந்தார்.
மலையாள நடிகர்களான ஜெயராம், பிஜு மேனன் ராஜஸ்தான் அணிக்கு ஆதரவு தெரிவித்து நேற்றைய போட்டியை ரசித்தார்கள். கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் தான் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருக்கிறார். கேரளாவுக்காக ஐபிஎல் அணி எதுவும் இல்லாதது குறிப்பிட வேண்டிய ஒன்று.