தெலுங்கு சினிமா பக்கம் கவனத்தை திருப்பிய கார்த்திக் சுப்பராஜ்! | கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும் புதிய படம்! | ஹிந்தியில் ரீமேக் ஆகும் டிராகன்! | பக்தி முதல் காமெடி வரை: இந்த வாரம் வரிசை கட்டும் ஓடிடி ரிலீஸ் | ‛காட்டி' புரமோஷனுக்கு வராமல் எக்ஸ் தளத்தில் 'சாட்டிங்' மட்டும் செய்த அனுஷ்கா | வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் 'கண்ணப்பா' | மேற்கத்திய நாடுகள் பிரச்னையைப் பேசும் 'மதராஸி' | காதலனுக்காக தயாரிப்பாளரான நடிகை | அதிக வேலையால் வாழ்க்கையை இழந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை | பிளாஷ்பேக்: நறுக் வசனத்தில் முதல் படம் |
சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் டான் படத்தை இயக்கியவர் சிபி சக்ரவர்த்தி. இந்த படம் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. இதையடுத்து அவர் ரஜினியை சந்தித்து கதை சொல்லி இருந்தார். அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதையடுத்து சில மாதங்களுக்கு பிறகு அவர் சொன்ன கதை திருப்தி இல்லை என்று ரஜினி தரப்பிலிருந்து சிபி சக்ரவர்த்திக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனால் பலத்த அதிர்ச்சி அடைந்த அவர், ரஜினிக்காக உருவாக்கிய அந்த கதையை தற்போது சிவகார்த்திகேயனை வைத்து இயக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மாவீரன் படத்தை அடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் அதன் பிறகு சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்கப் போகிறார்.