ஷாருக்கானை தொடர்ந்து சல்மான்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா | ஹன்சிகா - சோஹைல் விவாகரத்து: 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை | லாபத்தில் பங்காக சம்பளம் : ராதிகா பெருமிதம் | விஜயும் யோசித்திருப்பார்.. திரிஷாவுக்கு வாழ்த்துகள்..: பார்த்திபன் 2வது வீடியோ | மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் கிடையாது : சாரா அர்ஜுன் | நடிகை பாலியல் வழக்கு : கேரளா அரசு மேல்முறையீடுக்கு திலீப் உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ் | நயன்தாரா, கவின் நடிக்கும் ஹாய் படத்தின் போஸ்டர் வெளியானது | என் அப்பா நினைவுக்கு வந்தார் : தாய் கிழவி வெற்றி விழாவில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன் | 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது! | ரிலீஸாகி எட்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் சித்தாரே ஜமீன் பர் |

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் டான் படத்தை இயக்கியவர் சிபி சக்ரவர்த்தி. இந்த படம் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. இதையடுத்து அவர் ரஜினியை சந்தித்து கதை சொல்லி இருந்தார். அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதையடுத்து சில மாதங்களுக்கு பிறகு அவர் சொன்ன கதை திருப்தி இல்லை என்று ரஜினி தரப்பிலிருந்து சிபி சக்ரவர்த்திக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனால் பலத்த அதிர்ச்சி அடைந்த அவர், ரஜினிக்காக உருவாக்கிய அந்த கதையை தற்போது சிவகார்த்திகேயனை வைத்து இயக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மாவீரன் படத்தை அடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் அதன் பிறகு சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்கப் போகிறார்.




