இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தில் இயக்குனரானவர் பிரதீப் ரங்கநாதன். அதையடுத்து லவ் டுடே என்ற படத்தை இயக்கி, நாயகனாகவும் நடித்திருந்தார். இந்த படம் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 100 கோடி வசூல் சாதனை செய்தது. அப்படத்தில் ஒரு காட்சியில், இதுவரைக்கும் பக்காவா பேசிக்கிட்டு இருந்த திடீரென்று பார்த்திபன் மாதிரி பேச ஆரம்பிச்சிட்டியே என்று ஒரு டயலாக் பேசி இருப்பார்.
இந்த டயலாக்கின் பின்னணியில் தன்னை அவர் பழி வாங்கி விட்டதாக ஒரு பேட்டியில் நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். அதாவது பிரதீப் ரங்கநாதன் இயக்கிய கோமாளி படம் வெளியானபோது பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி என்பவரின் கதையும், கோமாளி படத்தின் கதையும் ஒன்றாக இருப்பதாக ஒரு பிரச்சனை எழுந்திருக்கிறது. இதையடுத்து கே. பாக்யராஜ் முன்னிலையில் இந்த கதை சர்ச்சை குறித்து பேசி தனது உதவியாளருக்கு ரூ 10 லட்சம் வாங்கி கொடுத்து இருக்கிறார் பார்த்திபன். இது எல்லாமே கோமாளி படம் திரைக்கு வந்த நேரத்தில் நடந்துள்ளது.
இந்த விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் அப்படி ஒரு டயலாக்கை அவர் வைத்திருக்கிறார் என்று கூறியுள்ள பார்த்திபன், அந்த டயலாக்கை முதலில் கேட்டு நானும் சிரித்து விட்டேன். ஆனால் நல்லா இருந்த நீ என்னடா பைத்தியம் ஆயிட்டியே என்பதை சொல்வதற்காகவே அவர் அப்படி வைத்திருப்பதை பின்னர் தான் புரிந்து கொண்டேன் என்று கூறியுள்ள பார்த்திபன், என்னை பழி வாங்கும் நோக்கத்தில் அந்த டயலாக்கை பிரதீப் ரங்கநாதன் வைத்திருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.