தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நம்பர் 1 எண்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். முதல் மூன்று சீசன்களின் வெற்றியை தொடர்ந்து நான்காவது சீசனுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சில தினங்களுக்கும் முன் மணிமேகலை திடீரென இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அதைத்தொடர்ந்து மற்றொரு காமெடி நட்சத்திரமான குரேஷியும் சீசன் 4லிருந்து விலகுவதாக செய்திகள் வெளியானது.
இது உண்மைதானா என ரசிகர்கள் தவித்து வந்த வேளையில் குரேஷியும் தனது டுவிட்டர் பக்கத்தில், 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி கொடுத்த நினைவுகளுக்கு நன்றி' என சொல்லி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதை சூசகமாக சொல்வது போல் டுவீட் போட்டிருந்தார். இதனால், அவர் உண்மையிலேயே விலகிவிட்டார் என சோஷியல் மீடியாவில் தகவல்கள் பரவ ஆரம்பித்தன. இதனையடுத்து அந்த டுவீட்டை குரேஷி தற்போது நீக்கிவிட்டு, 'உடல் மண்ணுக்கு உயிர் குக் வித் கோமாளிக்கு' என புதிதாக டுவீட் போட்டுள்ளார். இதனால், அவர் உண்மையிலேயே நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட்டாரா? இல்லையா என்பது புரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.