'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடைபெற்றது. 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் விருதையும், 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' படம் சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான விருதையும் வென்றது.
நேற்று விருது வழங்கும் விழா நடைபெற்ற டால்பி தியேட்டர் அரங்கில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இயக்குனர் ராஜமவுலிக்கு கடைசி வரிசையில்தான் சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. அது குறித்து தெலுங்கு சினிமா ரசிகர்கள் தங்களது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்கள்.
ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு குறிப்பிட்ட அளவில்தான் இருக்கைகள் ஒதுக்கப்படுமாம். விருதுக்குத் தேர்வு பெற்றுள்ளவர்கள் மட்டும் ஒரு சிலரை அழைத்து வர அனுமதி உண்டாம். மற்றபடி அந்த அரங்கில் 3,317 பேர் மட்டுமே அமரும் வசதி உள்ளதாம்.
அந்த விதத்தில் சிறந்த ஒரிஜனல் பாடல் விருதைப் பெற்ற கீரவாணி தரப்பில் இருந்துதான் சிறப்பு அனுமதி பெற்று ராஜமவுலியும், அவரது மனைவியும் கலந்து கொண்டிருக்க முடியும் என்கிறார்கள். அதே சமயத் தீபிகா படுகோனே முன் வரிசையில் அமர்ந்தது பற்றியும் கேள்வி எழுந்தது. அவர் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்டதால் அவருக்கு அங்கும் இடம் தரப்பட்டதாம்.