25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
மலையாளம், தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் தலா ஒரு படத்தில் நடித்து வரும் அமலாபால், வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். சமீபகாலமாக ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு காட்டி வரும் அமலாபால், அடிக்கடி ஆலயங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் பழனி முருகன் கோயிலுக்கு சென்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்த அமலா பால், மகா சிவராத்திரி அன்று இந்தோனேசியாவில் உள்ள ஒரு சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள குளத்தில் புனித நீராடி இருக்கிறார். அது குறித்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கானோர் லைக் செய்து உள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பல நடிகர், நடிகைகளும் உள்ளூர் கோயில்களிலேயே சிவராத்திரி விழாவை கொண்டாடிய நிலையில் அமலாபாலோ இந்தோனேசியா சென்று அங்குள்ள சிவன் கோயிலில் சிவராத்திரி விழாவை கொண்டாடியிருக்கிறார்.