பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்புகள் தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. இந்த படத்தில் த்ரிஷா, மிஷ்கின், அர்ஜூன், கவுதம் மேனன், பிரியா ஆனந்த் உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
காஷ்மீர் படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் தனி விமானத்தில் சென்றனர். அங்கு 15 நாள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. பனி சூழ்ந்த காஷ்மீர்தான் கதை களம் என்பதால் குளிர்காலத்தில் அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அங்கு எதிர்பார்த்ததை விட அதிக குளிர் சூழ்நிலை இருக்கிறது. அதோடு கடும் பனிப்பொழிவும் இருக்கிறது. இதனால் படப்பிடிப்பில் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் த்ரிஷா தற்போது சென்னை திரும்பி உள்ளார். என்றாலும் காஷ்மீரில் கிளைமாக்ஸ் சண்டை காட்சி படமாகிறது. அதில் த்ரிஷாவின் பங்கு குறைவு, அவர் அதை முடித்து விட்டே திரும்பி உள்ளார் என்று த்ரிஷா தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.




