
கடும் குளிரில் விஜய் படக்குழுவினர் அவதி: சென்னை திரும்பினார் த்ரிஷா
காஷ்மீர் படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் தனி விமானத்தில் சென்றனர். அங்கு 15 நாள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. பனி சூழ்ந்த காஷ்மீர்தான் கதை களம் என்பதால் குளிர்காலத்தில் அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அங்கு எதிர்பார்த்ததை விட அதிக குளிர் சூழ்நிலை இருக்கிறது. அதோடு கடும் பனிப்பொழிவும் இருக்கிறது. இதனால் படப்பிடிப்பில் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் த்ரிஷா தற்போது சென்னை திரும்பி உள்ளார். என்றாலும் காஷ்மீரில் கிளைமாக்ஸ் சண்டை காட்சி படமாகிறது. அதில் த்ரிஷாவின் பங்கு குறைவு, அவர் அதை முடித்து விட்டே திரும்பி உள்ளார் என்று த்ரிஷா தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!