இன்றைய ரசிகர்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு புத்திசாலிகளாக உள்ளனர் : யாமி கவுதம் | மிரட்டலின் பேரிலேயே ஜாய் உடன் திருமணம்: குழந்தையை கவனிக்க தயார்: மாதம்பட்டி ரங்கராஜ் | ஜிவி பிரகாஷ் 100வது படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியீடு | தி ராஜா சாப் ரிலீஸ் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம் | கேரள மாநில விருது: மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மம்முட்டி | ஒரே நேரத்தில் திரிஷ்யம் 3 மூன்று மொழிகளில் ரிலீஸா? : தெளிவாக குழப்பும் ஜீத்து ஜோசப் | 100 கோடி வசூலிக்குமா 'பாகுபலி தி எபிக்' | விஷால் மீது 'மகுடம்' முன்னாள் இயக்குனர் ரவி அரசு புகார் | மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசைப்படும் துருவ் | அஜித்துக்கு வில்லனாக நடிக்கலாமா? யோசிக்கும் விஜய்சேதுபதி |

துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த வருடம் மலையாளத்தில் சல்யூட், தெலுங்கில் சீதாராமம், தமிழில் ஹே சினாமிகா மற்றும் இந்தியில் சுப் என மொழிக்கு ஒன்றாக அவரது நான்கு படங்கள் வெளியாகின. இதில் சீதாராமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தநிலையில் தனது ரசிகர்களுடன் சோசியல் மீடியாவில் துல்கர் சல்மான் உரையாடினார். அவரிடம் ரசிகர் ஒருவர், இந்த 2023வது வருடத்தில் அவருடைய இரண்டு படங்களை பார்க்க விரும்புகிறேன் என்றும் அதுவும் இரண்டு பண்டிகை கால சீசனில் அவரது இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகுமா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு பதில் அளித்த துல்கர் சல்மான் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பையும் ஒரு மாதத்திற்குள் முடித்தால் நன்றாக இருக்கும் என்றுதான் எனக்கு தோன்றுகிறது.. இதற்கு நான் சீரியஸாக முயற்சிக்கிறேன் ஆனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பால் என்னுடைய படங்களின் படப்பிடிப்பும் ரிலீஸ் தேதியும் தாமதமாகிக் கொண்டே வருகிறது என்று கூறியுள்ளார்.