ரஜினியை சந்தித்த சிம்ரன் | தமிழ் சினிமாவில் தொடரும் 1000 கோடி கனவு | ‛சூ ப்ரம் சோ' கன்னட படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பும் அஜய் தேவ்கன் | இனி, நடிப்புக்கு முழுக்கு: சமந்தா பிளான் | மருமகனுக்காக மாமா படம் தயாரிப்பாரா? | 2 வருடங்களுக்கு முன் காணாமல் போன மெமரி கார்டை கண்டுபிடிக்க சிறப்பு குழுவை நியமித்த ஸ்வேதா மேனன் | ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் |
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த வருடம் மலையாளத்தில் சல்யூட், தெலுங்கில் சீதாராமம், தமிழில் ஹே சினாமிகா மற்றும் இந்தியில் சுப் என மொழிக்கு ஒன்றாக அவரது நான்கு படங்கள் வெளியாகின. இதில் சீதாராமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தநிலையில் தனது ரசிகர்களுடன் சோசியல் மீடியாவில் துல்கர் சல்மான் உரையாடினார். அவரிடம் ரசிகர் ஒருவர், இந்த 2023வது வருடத்தில் அவருடைய இரண்டு படங்களை பார்க்க விரும்புகிறேன் என்றும் அதுவும் இரண்டு பண்டிகை கால சீசனில் அவரது இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகுமா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு பதில் அளித்த துல்கர் சல்மான் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பையும் ஒரு மாதத்திற்குள் முடித்தால் நன்றாக இருக்கும் என்றுதான் எனக்கு தோன்றுகிறது.. இதற்கு நான் சீரியஸாக முயற்சிக்கிறேன் ஆனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பால் என்னுடைய படங்களின் படப்பிடிப்பும் ரிலீஸ் தேதியும் தாமதமாகிக் கொண்டே வருகிறது என்று கூறியுள்ளார்.