காதல், கனவுகள், மனித தொடர்புகளை 'தோ தீவானே சேஹர் மெய்ன்' பேசும் : மிருணாள் தாக்கூர் | தயாரிப்பாளர்களை குழியில் தள்ளும் இயக்குனர்கள் : சேரன் பரபரப்பு பேச்சு | விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் பிடி வாரண்ட் | மம்முட்டி வாங்கி கொடுத்த 'ஹியரிங் எய்டு' கருவியை கழட்டி வீசிய தொழிலாளி | 'டூரிஸ்ட் பேமிலி' பாணி கதையில் ஹிந்தியில் நடிக்கும் பிரியாமணி | நானாக வாய்ப்பு கேட்ட ஒரே இயக்குனர் இவர்தான் ; மிருணாள் தாகூர் | பிளாஷ்பேக் : அக்கா அளவுக்கு சாதிக்க முடியாமல் போன தங்கை | சினிமாவிற்கு வரும் புதிய இரட்டை இசை அமைப்பாளர்கள் | 10 கோடி செலுத்த காலஅவகாசம் கேட்ட விஷால் மனு தள்ளுபடி | கடும் போட்டியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் |

மாஸ்டர் படத்தை அடுத்து விஜய்யின் 67வது படத்தை தற்போது இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. அடுத்தபடியாக மூன்றாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாரிசு படம் திரைக்கு வந்ததும் விஜய் 67வது படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த லோகேஷ் கனகராஜ், தற்போது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு பிப்ரவரி மாதத்தில் விஜய் 67வது படத்தின் அறிமுக டீசர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியானதை அடுத்து விஜய் ரசிகர்கள் வட்டாரத்தில் பரபரப்பு அதிகரித்து இருக்கிறது.




