மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

ஆஸ்கர் விருதுக்காக ஆண்டு தோறும் ஒரு படத்தை தேர்வு செய்து அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்படும். அந்த வரிசையில் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைக்கப்பட்ட படம் 'செல்லோ ஷோ'(லாஸ்ட் பிலிம் ஷோ) என்கிற குஜராத்தி படம். சினிமா தற்போது டிஜிட்டலில் திரையிடப்படுகிறது. முன்பு பிலிமில் திரையிடப்பட்டது. திரையிடும் கருவியான புரொஜக்டர் மீதும், பிலிம் மீதும் நேசம் கொண்ட ஒரு சிறுவனின் கதையாக இந்த படம் உருவாகி இருந்தது. பான் நலின் இயக்கி இருந்தார்.
இந்த படம் ஆஸ்கர் விருதில் இருந்து வெளியேறி இருக்கிறது. இதுகுறித்து இயக்குனர் பான் நலின் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதவாது: என்னுடைய சினிமா குடும்பத்தினரே... மகிழ்ச்சியுடன் முன்னேறுவோம். ஒரு குழுவாக நீங்கள் மிகவும் அற்புதமான செயல்பட்டீர்கள். பல்வேறு தடைகளிலும் நீங்கள் நம் கதையின் பக்கமே உறுதியாக இருந்தீர்கள். அதுதான் உலகெங்கிலும் உள்ளவர்களின் இதயங்களை கவர்ந்தது. ஏனென்றால் படத்தை எடுக்கும்போது நம் அனைவருக்குமே தெரியும் இது கடைசி படமாகவோ, கடைசி காட்சியாகவோ இருக்காது.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.




