பத்ம பூஷன் விருது பெற்றார் அஜித் | மூன்றாவது முறையாக சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் நயன்தாரா? | மூன்றாவது தெலுங்குப் படத்தை முடித்த 'திருடன் போலீஸ்' இயக்குனர் | விஜய் சேதுபதி படத்தில் கன்னட நடிகர் துனியா விஜய் | பத்மபூஷன் விருது நாளில், விஜய் ரசிகர்கள் மீது அஜித் ரசிகர்கள் கோபம் | சர்வானந்த் ஜோடியாக இரண்டு இளம் நாயகிகள் | சமந்தா தயாரித்த சுபம் படம் மே 9ல் ரிலீஸ் | சர்ச்சையான பஹல்காம் தாக்குதல் அறிக்கை : விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி | ''எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் லாலேட்டா'' ; வெளிப்படையாகவே கோரிக்கை வைத்த '2018' பட இயக்குனர் | சிம்புவுக்கு ஜோடியாகும் கயாடு லோகர் |
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். பொங்கல் பண்டிகை கொண்டாடியது குறித்து சில புகைப்படங்களுடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் மறக்க முடியாத ஒரு பொங்கலாக இருக்கும் என நினைக்கிறேன். மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்புடன் இருக்க கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
பொங்கல் வைத்தது, மாட்டுக்கு பொங்கல் வைத்து வணங்கியது, மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் பெற்றோர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் ஆகியோரிடம் ஆசீர்வாதம் வாங்கியது உள்ளிட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷ் இடம் பெறவில்லை. இருவரும் பிரிந்தனர் என்று சொல்லப்பட்டாலும் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டனர் என்றுதான் செய்திகள் வெளிவந்தன. ஆனால், பொங்கல் கொண்டாட்டத்தில் தனுஷ் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது. அந்தப் புகைப்படங்களில் தனுஷ் இல்லாதது வருத்தமாக உள்ளது என அவரது ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.