மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? | ரஜினியுடன் நடிக்கும்போது இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டி இருந்தது ; நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு | விஜய்சேதுபதி குறித்து சிலாகிக்கும் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் | பிளாஷ்பேக்: “அரசகட்டளை” என பெயர் மாற்றமான எம் ஜி ஆரின் “பவானி” | இதயக்கனி, முத்து, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் | எனக்கு நட்டம் தான், துரந்தர் 2 படத்தில் நடிக்காதது குறித்து அனில் கபூர் விளக்கம் |

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். பொங்கல் பண்டிகை கொண்டாடியது குறித்து சில புகைப்படங்களுடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் மறக்க முடியாத ஒரு பொங்கலாக இருக்கும் என நினைக்கிறேன். மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்புடன் இருக்க கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
பொங்கல் வைத்தது, மாட்டுக்கு பொங்கல் வைத்து வணங்கியது, மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் பெற்றோர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் ஆகியோரிடம் ஆசீர்வாதம் வாங்கியது உள்ளிட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷ் இடம் பெறவில்லை. இருவரும் பிரிந்தனர் என்று சொல்லப்பட்டாலும் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டனர் என்றுதான் செய்திகள் வெளிவந்தன. ஆனால், பொங்கல் கொண்டாட்டத்தில் தனுஷ் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது. அந்தப் புகைப்படங்களில் தனுஷ் இல்லாதது வருத்தமாக உள்ளது என அவரது ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.




